நவம்பர் வரை ரேஷன் கடைகளில் இலவச அரிசி வழங்கப்படும் - தமிழக அரசு அறிவிப்பு!

சென்னை: ரேஷன் கடைகளில் நவம்பர் மாதம் வரை அரிசி அட்டைதாரர்களுக்கு விலையின்றி அரிசி வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சென்னை: ரேஷன் கடைகளில் நவம்பர் மாதம் வரை அரிசி அட்டைதாரர்களுக்கு விலையின்றி அரிசி வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் ஜூலை 1 முதல் 3 வரை பணம் கொடுத்து பொருள் பெற்றவர்களுக்கு அடுத்த மாதம் ஈடு செய்யப்படும் என்றும் ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதங்களில் வழங்கப்பட்ட அரிசி அளவின் படி நவம்பர் வரை வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கொரோனா வைரஸ்‌ தொற்று காரணமாக 31.7.2020 வரை சில தளர்வுகளுடன்‌ ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால்‌, குடும்ப அட்டைதாரர்கள்‌ பயன்பெறும்‌ வகையில்‌ ஏற்கனவே இவ்வாண்டு ஏப்ரல்‌, மே மற்றும்‌ ஜூன்‌ மாதங்களில்‌ கூடுதல்‌ அரிசி மற்றும்‌ அத்தியாவசியப்‌ பொருட்கள்‌ விலையில்லாமல்‌ வழங்கப்பட்டதைப்‌ போலவே, இம்மாதமும்‌ (ஜூலை 2020) குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையின்றி துவரம்பருப்பு, சமையல்‌ எண்ணெய்‌, சர்க்கரை வழங்கவும்‌ உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு ஆணையிடுவதற்கு முன்பு, அதாவது 1.7.2020 முதல்‌ 3.7.2020 வரை குடும்ப அட்டைதாரர்கள்‌ தங்களுக்குரிய அத்தியாவசியப்‌ பொருட்களான துவரம்பருப்பு, சமையல்‌ எண்ணெய்‌ மற்றும்‌ சர்க்கரை ஆகியவற்றை நியாய விலைக்‌ கடைகளில்‌ அதற்கான விலை கொடுத்து பெற்றுள்ளனர்‌. அவ்வாறு பெற்றுக்கொண்டுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு, அந்த தொகையை எதிர்வரும்‌ ஆகஸ்ட்‌ மாதத்தில்‌ வழங்கப்படும்‌ துவரம்பருப்பு, சமையல்‌ எண்ணெய்‌ மற்றும்‌ சர்க்கரை ஆகிய பொருட்களின்‌ விலையில்‌ ஈடுசெய்து கொள்ளப்படும்‌.

இக்குடும்ப அட்டைதாரர்களுக்கு செல்பேசியில்‌ இதற்கான குறுஞ்செய்தி அனுப்பப்படும்‌. மேலும்‌, இதற்குரிய பதிவுகள்‌ விற்பனை முனைய இயந்திரத்தில்‌ மேற்கொள்ளப்படும்‌. மேற்கண்ட குடும்ப அட்டைதாரர்கள்‌, இம்மாதத்திற்கு தற்போது ஒதுக்கப்பட்டுள்ள கூடுதல்‌ அரிசி மீண்டும்‌ சென்று இம்மாதமே பெற்றுக்கொள்ளலாம்‌.

அதேபோல்‌, நவம்பர்‌ மாதம்‌ வரை, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு, நபர்‌ ஒன்றுக்கு 5 கிலோ அரிசி கூடுதலாக மத்திய அரசு வழங்குவதை கருத்தில் கொண்டு அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் ஏற்கனவே ஏப்ரல், மே, ஜூன்‌, ஜூலை மாதங்களில்‌ வழங்கப்பட்ட அரிசி அளவின்படி நவம்பர்‌ 2020 வரை விலையின்றி அரிசி வழங்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...