கோவையில் செயல்படும் 4 தனியார் பரிசோதனை மையங்களின் அனுமதி தற்காலிகமாக ரத்து!

கோவை: கோவையில் செயல்பட்டு வரும் நான்கு தனியார் கொரோனா பரிசோதனை மையங்களின் அனுமதியை தற்காலிகமாக சுகாதாரத்துறை ரத்து செய்துள்ளது.



கோவை: கோவையில் செயல்பட்டு வரும் நான்கு தனியார் கொரோனா பரிசோதனை மையங்களின் அனுமதியை தற்காலிகமாக சுகாதாரத்துறை ரத்து செய்துள்ளது.

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

இதனிடையே, சோதனைகளை அதிகப்படுத்துவதன் மூலம் தொற்றினை கண்டறிந்து கட்டுப்படுத்தலாம் என்ற நோக்கில் தனியார் பரிசோதனை மையங்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, கோவையில் அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ மருத்துவமனை ஆகியவற்றுடன் எட்டு தனியார் பரிசோதனை மையங்களிலும், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வந்தது. 

இந்த நிலையில், கோவையில் செயல்பட்டு வந்த ஆர்பிட்டோ ஏசியா, பயோலைன், மைக்ரோ பயாலஜி, கிருஷ்ணா ஆகிய மையங்களில் கொரோனோ பரிசோதனை அனுமதியை சுகாதாரத்துறை தற்காலிகமாக தடை செய்துள்ளது.

இந்த ஆய்வகங்களைத் தொடர்ந்து சோதனை நெறிமுறைகளில் ஏதேனும் முறைகேடு நடந்ததா என்று விசாரணைகள் நடந்து வருகின்றன.

குறிப்பாக ஆர்பிட்டோ ஆசியா ஆய்வகம், பயோலின் ஆய்வகம், நுண்ணுயிரியல் ஆய்வகம் மற்றும் கிருஷ்ணா ஆய்வகம் ஆகியவற்றில் சோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதாக ஜூன் மாதத்தில் ஒரு சிறிய காலப்பகுதியில், ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பொது சுகாதார அதிகாரிகளால் குறிப்பிடப்படும் பயனாளிகள் அல்லாதவர்களுக்கு முதலமைச்சர் விரிவான சுகாதார காப்பீட்டுத் திட்டத்திற்கு (CMCHIS) ஒத்த காப்பீட்டுத் தொகையை வழங்க அனுமதிக்கப்பட்ட யு.ஐ.ஐ.சி, காப்பீட்டு நிறுவனம் சுமார் 11,535 சோதனைகளுக்கு பணம் செலுத்திய பின்னர் ஜூன் மாதத்திற்கு நிறுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல, பல தனியார் ஆய்வகங்கள் அறிகுறியற்ற நோயாளிகளுக்கு ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகளை நடத்துவதாகவும், ஐ.சி.எம்.ஆர் நெறிமுறைகளை பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்த சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கொரோனா பரிசோதனைகளுக்கு அனைத்து தனியார் ஆய்வகங்களையும் பயன்படுத்துவதையே அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது எனவும் அதேசமயம் விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...