நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி காம்பாய் கடை பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களில் காட்டெருமைகள் உலா வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி காம்பாய் கடை பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களில் காட்டெருமைகள் உலா வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் அவ்வப்போது வன விலங்குகள் ஊருக்குள் வருவது வாடிக்கையாகவே உள்ளது. குறிப்பாக, தற்போது காட்டெருமைகள் கூட்டம் கூட்டமாக குன்னூர், கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார கிராம பகுதிகளான, மஞ்சூர், குந்தா, தூதர்மட்டம், சேலாஸ் போன்ற பகுதிகளில் உலா வருகிறது. இதனால் பொது மக்கள் பெரும் அச்சத்துடனே வெளியே சென்று வரும் நிலை உள்ளது.
அதேபோல, தேயிலை தோட்டங்களிலும், விவசாயம் செய்யும் நிலங்களிலும் வன விலங்குகளால் சேதம் ஏற்படுகிறது. இதனால் வேலைக்கு செல்பவர்கள் வனப்பகுதியில் உள்ள சாலை வழியே பணிக்கு செல்லும் போது வன விலங்குகள் தாக்குதலுக்கு ஆளாவதோடு உயிர் சேதமும் ஏற்படுகிறது.
இந்த நிலையில், கோத்தகிரி காம்பாய் கடை பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களில் காட்டெருமைகள் கூட்டமாக உலா வருவதால் இப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே, அசம்பாவிதங்கள் நடக்கும் முன் வனத்துறையினர் இவற்றை அடர்ந்த வனப் பகுதிகளுக்குள் விரட்ட வேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளனர்.
மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் அவ்வப்போது வன விலங்குகள் ஊருக்குள் வருவது வாடிக்கையாகவே உள்ளது. குறிப்பாக, தற்போது காட்டெருமைகள் கூட்டம் கூட்டமாக குன்னூர், கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார கிராம பகுதிகளான, மஞ்சூர், குந்தா, தூதர்மட்டம், சேலாஸ் போன்ற பகுதிகளில் உலா வருகிறது. இதனால் பொது மக்கள் பெரும் அச்சத்துடனே வெளியே சென்று வரும் நிலை உள்ளது.
அதேபோல, தேயிலை தோட்டங்களிலும், விவசாயம் செய்யும் நிலங்களிலும் வன விலங்குகளால் சேதம் ஏற்படுகிறது. இதனால் வேலைக்கு செல்பவர்கள் வனப்பகுதியில் உள்ள சாலை வழியே பணிக்கு செல்லும் போது வன விலங்குகள் தாக்குதலுக்கு ஆளாவதோடு உயிர் சேதமும் ஏற்படுகிறது.
இந்த நிலையில், கோத்தகிரி காம்பாய் கடை பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களில் காட்டெருமைகள் கூட்டமாக உலா வருவதால் இப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே, அசம்பாவிதங்கள் நடக்கும் முன் வனத்துறையினர் இவற்றை அடர்ந்த வனப் பகுதிகளுக்குள் விரட்ட வேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளனர்.