கவுண்டம்பாளையம் மேம்பால பணிகள் மந்தம்; போக்குவரத்து நெரிசலால் சமூக இடைவெளி கடைப்பிடிக்க முடியாமல் மக்கள் அவதி
கோவை: கோவை மேட்டுப்பாளையம் சாலையில் கவுண்டம்பாளையம் பகுதியில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகள் மந்தமாக நடைபெறுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சமூக இடைவெளி கடைப்பிடிக்க முடியாமல் மக்கள் அவதியடைகின்றனர்.
கோவை கவுண்டம்பாளையம் சந்திப்பில் ஹவுசிங் யூனிட் முதல் ராமசாமி கல்யாண மண்டம் வரை சுமார் ஆயிரம் மீட்டர் நீளத்தில் சுமார் 29 துாண்களுடன் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதே போல ஜி.என் மில்ஸ் சந்திப்பில் சுமார் 670 மீட்டர் நீளத்தில் சுமார் 15 துாண்களுடன் மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதற்கான பணிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் துவங்கியது, ஒரு ஆண்டு ஆகியும் கூட பணிகள் மிகவும் மந்தமாக நடப்பதால் மக்கள் மிகவும் சீரமம் அடைந்துள்ளனர்.

ஊரடங்கால் மேம்பால பணிகள் பாதிக்கப்பட்ட போதிலும், தளர்வுகள் அளித்ததை அடுத்து மீண்டும் தற்போது மேம்பால பணிகள் நடந்து வருகிறது. ஆனால் வேலைக்கு குறைந்த அளவே ஆட்கள் வருவதால் மேம்பால பணிகள் மந்தமடைந்துள்ளன.
இந்த மேம்பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டால் அதில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை, 70 சதவீதமாகவும், மேம்பாலம் கீழ் பகுதியில் சர்வீஸ் சாலையில் பயணிக்கும் நபர்களின் எண்ணிக்கை, 30 சதவீதமாகவும் இருக்கும். இதனால், குறிப்பிட்ட இரண்டு பகுதிகளிலும் போக்குவரத்து நெருக்கடி கணிசமாக குறையும்.
இதனிடையே மேம்பால பணிகள் தாமதம் அடைவதால் கோவை மேட்டுப்பாளையம் சாலையில் காலை முதல் மாலை வரை போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், சமூக இடைவெளியை பின்பற்ற முடியாமல் மக்கள் மிகுந்த அவதியடைந்து வருவதால்,
மேம்பால பணிகளை துரிதப்படுத்தி விரைவில் மேம்பாலம் கட்டிமுடிக்கப்பட வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கருத்தாக உள்ளது.
கோவை கவுண்டம்பாளையம் சந்திப்பில் ஹவுசிங் யூனிட் முதல் ராமசாமி கல்யாண மண்டம் வரை சுமார் ஆயிரம் மீட்டர் நீளத்தில் சுமார் 29 துாண்களுடன் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதே போல ஜி.என் மில்ஸ் சந்திப்பில் சுமார் 670 மீட்டர் நீளத்தில் சுமார் 15 துாண்களுடன் மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதற்கான பணிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் துவங்கியது, ஒரு ஆண்டு ஆகியும் கூட பணிகள் மிகவும் மந்தமாக நடப்பதால் மக்கள் மிகவும் சீரமம் அடைந்துள்ளனர்.
ஊரடங்கால் மேம்பால பணிகள் பாதிக்கப்பட்ட போதிலும், தளர்வுகள் அளித்ததை அடுத்து மீண்டும் தற்போது மேம்பால பணிகள் நடந்து வருகிறது. ஆனால் வேலைக்கு குறைந்த அளவே ஆட்கள் வருவதால் மேம்பால பணிகள் மந்தமடைந்துள்ளன.
இந்த மேம்பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டால் அதில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை, 70 சதவீதமாகவும், மேம்பாலம் கீழ் பகுதியில் சர்வீஸ் சாலையில் பயணிக்கும் நபர்களின் எண்ணிக்கை, 30 சதவீதமாகவும் இருக்கும். இதனால், குறிப்பிட்ட இரண்டு பகுதிகளிலும் போக்குவரத்து நெருக்கடி கணிசமாக குறையும்.
இதனிடையே மேம்பால பணிகள் தாமதம் அடைவதால் கோவை மேட்டுப்பாளையம் சாலையில் காலை முதல் மாலை வரை போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், சமூக இடைவெளியை பின்பற்ற முடியாமல் மக்கள் மிகுந்த அவதியடைந்து வருவதால்,
மேம்பால பணிகளை துரிதப்படுத்தி விரைவில் மேம்பாலம் கட்டிமுடிக்கப்பட வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கருத்தாக உள்ளது.