திருப்பூரில் இன்று புதிதாக 6 பேருக்கு கொரோனா உறுதி; பாதிப்பின் எண்ணிக்கை 204 ஆக உயர்வு
திருப்பூர்: திருப்பூரில் இன்று புதிதாக 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், பாதிப்பின் எண்ணிக்கை 204 ஆக உயர்ந்துள்ளதாக, என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திக்கேயன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மதுரை, கோவை, சேலம், திருப்பூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை, நாளுக்கு நாள் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை தாக்கம் குறைவாக இருந்தாலும், மூன்று வாரங்களுக்கு முன்பு 115 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று ஏற்பட்டிருந்த நிலையில், இன்று 204 பேர் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
இன்று புதிதாக தொற்று ஏற்பட்டுள்ள ஆறு பேர் -- அனுப்பாளையத்தைச் சேர்ந்த 50 வயதான நபர், சமாளபுரம் பல்லடம் பகுதியில் உள்ள 53 வயதான ஆண், பிரைம் என்கிளேன்ட் அபார்டமென்ட்டில் இருந்த43 வயது ஆண், 29 வயதான நாதாகடையூரை சேர்ந்த ஆண், 47 வயதான தாந்தோனி நகரை சேர்ந்த பெண் மற்றும் ரோடோமைல் அப்ரேசல் நியூ திருப்பூர் பகுதியை சேர்ந்த 32 வயதான பெண், அடங்குவர்.
மேலும், இன்று 140 பேர் உட்பட 3529 பேர் வீட்டுக்கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும், 312 பேர் இதுவரை 14 நாட்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்துள்ளதாகவும் ஆட்சியர் விஜயகார்த்திக்கேயன் தெரிவித்துள்ளார்.
இதோடு 202 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்,
கடந்த 28 ஆம் தேதி முதல்கோவை தனியார் மருத்துவமனையில் கொரோனா அறிகுறியோடு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்தசுப்ரமணிய செட்டியார் தெருவைச் சேர்ந்த 75 வயதான ஆண் இன்று காலைசிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அவருடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், தொற்று இல்லை என சோதனை முடிவுகள் வெளியாகியுள்ளதாகவும், திருப்பூர் மாவட்ட ஆட்சியர்தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மதுரை, கோவை, சேலம், திருப்பூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை, நாளுக்கு நாள் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை தாக்கம் குறைவாக இருந்தாலும், மூன்று வாரங்களுக்கு முன்பு 115 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று ஏற்பட்டிருந்த நிலையில், இன்று 204 பேர் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
இன்று புதிதாக தொற்று ஏற்பட்டுள்ள ஆறு பேர் -- அனுப்பாளையத்தைச் சேர்ந்த 50 வயதான நபர், சமாளபுரம் பல்லடம் பகுதியில் உள்ள 53 வயதான ஆண், பிரைம் என்கிளேன்ட் அபார்டமென்ட்டில் இருந்த43 வயது ஆண், 29 வயதான நாதாகடையூரை சேர்ந்த ஆண், 47 வயதான தாந்தோனி நகரை சேர்ந்த பெண் மற்றும் ரோடோமைல் அப்ரேசல் நியூ திருப்பூர் பகுதியை சேர்ந்த 32 வயதான பெண், அடங்குவர்.
மேலும், இன்று 140 பேர் உட்பட 3529 பேர் வீட்டுக்கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும், 312 பேர் இதுவரை 14 நாட்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்துள்ளதாகவும் ஆட்சியர் விஜயகார்த்திக்கேயன் தெரிவித்துள்ளார்.
இதோடு 202 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்,
கடந்த 28 ஆம் தேதி முதல்கோவை தனியார் மருத்துவமனையில் கொரோனா அறிகுறியோடு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்தசுப்ரமணிய செட்டியார் தெருவைச் சேர்ந்த 75 வயதான ஆண் இன்று காலைசிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அவருடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், தொற்று இல்லை என சோதனை முடிவுகள் வெளியாகியுள்ளதாகவும், திருப்பூர் மாவட்ட ஆட்சியர்தெரிவித்துள்ளார்.