திருப்பூரில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த முன்னாள் சன் தொலைக்காட்சி நிருபர் சந்தோஷ் வேலாயுதத்திற்கு, கோவை மாவட்ட அனைத்து பத்திரிக்கையாளர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
கோவை: திருப்பூரில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த முன்னாள் சன் தொலைக்காட்சி நிருபர் சந்தோஷ் வேலாயுதத்திற்கு, கோவை மாவட்ட அனைத்து பத்திரிக்கையாளர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
கோவை காரமடையை சேர்ந்த சந்தோஷ் வேலாயுதம் (38) கடந்த 2010ஆம் ஆண்டு சென்னையில் சன் தொலைக்காட்சியில்
செய்தியாளராக பணியில் சேர்ந்தார். இவர் சென்னையிலிருந்து 2014 ஆம் முதல் கோவையில் பணியாற்றிவந்தார். இதனையடுத்து தற்போது திருப்பூர் நியூஸ் எக்ஸ்பிரஸ் நாளிதழில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு இரு சக்கர வாகனத்தில் வந்த அவர் திருமுருகன் பூண்டி அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு தீவிர சிகிச்சைக்கு அளிக்கபட்டது.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று மதியம் 12.20 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது.
இந்தகவலையறிந்து அதிர்ச்சியடைந்த கோவை பத்திரிகையாளர்கள் அரசு மருத்துவமனையில் குவிந்து உள்ளனர்.
அனைவருடனுடம் அன்பாக பழக கூடிய ஒரு நல்ல நண்பனை இழந்து விட்டதாக அனைவரும் வேதனை தெதிவித்துள்ளனர்.
இவர் கோவை பிரஸ் கிளப் நிர்வாகியாக 2018-19 ம் ஆண்டு செயற்குழு உறுப்பினராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது மனைவி திவ்யா மற்றும் தீக்ஷா என்ற பெண் குழந்தையை விட்டும், பத்திரிக்கை நண்பர்களை விட்டு பிரிந்து சென்ற சந்தோஷ் வேலாயுதம் மறைவிற்கு கோவை மாவட்ட அனைத்து பத்திரிக்கையாளர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
கோவை காரமடையை சேர்ந்த சந்தோஷ் வேலாயுதம் (38) கடந்த 2010ஆம் ஆண்டு சென்னையில் சன் தொலைக்காட்சியில்
செய்தியாளராக பணியில் சேர்ந்தார். இவர் சென்னையிலிருந்து 2014 ஆம் முதல் கோவையில் பணியாற்றிவந்தார். இதனையடுத்து தற்போது திருப்பூர் நியூஸ் எக்ஸ்பிரஸ் நாளிதழில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு இரு சக்கர வாகனத்தில் வந்த அவர் திருமுருகன் பூண்டி அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு தீவிர சிகிச்சைக்கு அளிக்கபட்டது.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று மதியம் 12.20 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது.
இந்தகவலையறிந்து அதிர்ச்சியடைந்த கோவை பத்திரிகையாளர்கள் அரசு மருத்துவமனையில் குவிந்து உள்ளனர்.
அனைவருடனுடம் அன்பாக பழக கூடிய ஒரு நல்ல நண்பனை இழந்து விட்டதாக அனைவரும் வேதனை தெதிவித்துள்ளனர்.
இவர் கோவை பிரஸ் கிளப் நிர்வாகியாக 2018-19 ம் ஆண்டு செயற்குழு உறுப்பினராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது மனைவி திவ்யா மற்றும் தீக்ஷா என்ற பெண் குழந்தையை விட்டும், பத்திரிக்கை நண்பர்களை விட்டு பிரிந்து சென்ற சந்தோஷ் வேலாயுதம் மறைவிற்கு கோவை மாவட்ட அனைத்து பத்திரிக்கையாளர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.