கோவையில் ஏழு வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கைது

கோவை: கோவையில் ஏழு வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த 65 வயது முதியவரை போலீஸார் இன்று கைது செய்தனர்.

கோவை: கோவையில் ஏழு வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த 65 வயது முதியவரை போலீஸார் இன்று கைது செய்தனர்.

இது குறித்து போலீஸார் கூறிகையில்: கோவை தாமு நகர் பகுதியை சேர்ந்த தம்பதியினர், பீளமேடு பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வருகின்றனர்.

வியாபாரத்துக்கு செல்லும் போது, அவர்களது 7 வயது பெண் குழந்தையை தனது உறவினரிடம் விட்டு சென்று உள்ளனர்.

இந்நிலையில் உறவினரான வரதராஜன் (65) அந்த குழந்தைக்கு கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் பாதிப்படைந்த குழந்தை பெற்றோரிடம் தெரிவித்துள்ளது.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த குழந்தையின் பெற்றோர், கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது குறித்து விசாரணை நடத்திய போலீஸார் முதியவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...