கோவையில் இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவிற்கு 74 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு!

கோவை: கோவை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை: கோவை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தீவிரமடைந்துள்ளதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், கோவையில் இன்று ஒரே நாளில் இதுவரையில் இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 74 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

இதில் கோவை குனியமுத்தூர், குறிச்சி, போத்தனூர் பகுதியில் ஒரே நாளில் 12 பேருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் 6 பேர் சமீபத்தில் அவினாசி சாலையில் உள்ள துணிக்கடையில் மகளின் திருமணத்திற்காக துணிகள் வாங்கி வந்தது தெரியவந்துள்ளது.

சம்பந்தப்பட்ட கணேஷ் ஷா துணிக்கடையின் ஊழியர்கள் 17 பேருக்கு மேல் தொற்று உறுதி செய்யப்பட்டு அந்த பகுதியை தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது அந்த கடையில் துணி வாங்க சென்ற குடும்பத்தினர் அனைவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல, கோவை மயில்கள் நியூயார்க் அவென்யூ அருகில் உள்ள அழகு நகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக நில அளவையர் மற்றும் அவரது மனைவி இவருக்கும் கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று அவரது உறவினர்கள் அதே பகுதியைச் சேர்ந்த கணவன்(30), மனைவி(26) இ௫வர் மற்றும் அவர்களுடைய உறவினருடைய 5 வயது குழந்தை மூன்று பே௫க்கும் கொரானா தொற்று ஏற்பட்டதையடுத்து இவர்களை இ.எஸ்.ஜ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும், செல்வபுரம் பகுதியில் 13 பேர், தொண்டாமுத்தூர் பகுதியில் 8 பேர், போத்தனூர், நஞ்சுண்டாபுரம் பகுதியில் 7 பேர், பீளமேடு பகுதியில் 4 பேர் என குவியலாகவும் விளாங்குறிச்சி 1, இஎஸ்ஐ மருத்துவமனையில் 13 பேருக்கும், அரசு மருத்துவமனையில் 2, துடியலூர் 1, பொள்ளாச்சி 1, விமானநிலையம் 6 என மொத்தம் 74 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 719 ஆக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் கோவையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...