கோவை: கோவையில் அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த ஆன்லைன் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
கோவை: கோவையில் அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த ஆன்லைன் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
கோவை பீளமேடு பகுதியில் மெரிடியா ஷேர் டிரேடிங் என்ற ஆன்லைன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் நிர்வாக இயக்குனர் ரவிக்குமார்(34). இவரது பங்குதாரராக மகாதேவன், வைதீஸ்வரன், ரவிக்குமார் ஆகியோர் உள்ளனர்.
இந்நிலையில், தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக விளம்பரம் செய்து இருந்தனர். இதனை நம்பி ஏராளமானோர் பணம் முதலீடு செய்தனர்.
இதனிடையே, முதிர்வு காலம் முடிந்தும் பணத்தை திருப்பி தர காலதாமதம் செய்ததால் சந்தேகம் அடைந்த முதலீட்டாளர்கள் பணத்தை உடனடியாக திருப்பி தர வலியுறுத்தி உள்ளனர்.
மேலும் முறையான பதில் அளிக்காத காரணத்தால் பாதிக்கப்பட்ட ஒண்டிப்புதூரை சேர்ந்த லெனின் என்பவர் தன்னிடம் ஒன்றரை லட்ச ரூபாய் பெற்று கொண்டு பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி விட்டதாக பொருளாதார குற்ற பிரிவில் புகார் அளித்தார்.
இதையடுத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சரவணனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவரது கூட்டாளிகளான மகாதேவன், வைத்தீஸ்வரன், ரவிக்குமாரை தேடி வருகின்றனர். இவர்கள் 4.5 கோடி ரூபாய் வரை பொதுமக்களிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
கோவை பீளமேடு பகுதியில் மெரிடியா ஷேர் டிரேடிங் என்ற ஆன்லைன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் நிர்வாக இயக்குனர் ரவிக்குமார்(34). இவரது பங்குதாரராக மகாதேவன், வைதீஸ்வரன், ரவிக்குமார் ஆகியோர் உள்ளனர்.
இந்நிலையில், தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக விளம்பரம் செய்து இருந்தனர். இதனை நம்பி ஏராளமானோர் பணம் முதலீடு செய்தனர்.
இதனிடையே, முதிர்வு காலம் முடிந்தும் பணத்தை திருப்பி தர காலதாமதம் செய்ததால் சந்தேகம் அடைந்த முதலீட்டாளர்கள் பணத்தை உடனடியாக திருப்பி தர வலியுறுத்தி உள்ளனர்.
மேலும் முறையான பதில் அளிக்காத காரணத்தால் பாதிக்கப்பட்ட ஒண்டிப்புதூரை சேர்ந்த லெனின் என்பவர் தன்னிடம் ஒன்றரை லட்ச ரூபாய் பெற்று கொண்டு பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி விட்டதாக பொருளாதார குற்ற பிரிவில் புகார் அளித்தார்.
இதையடுத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சரவணனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவரது கூட்டாளிகளான மகாதேவன், வைத்தீஸ்வரன், ரவிக்குமாரை தேடி வருகின்றனர். இவர்கள் 4.5 கோடி ரூபாய் வரை பொதுமக்களிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டு உள்ளதாக கூறப்படுகிறது.