பரிசோதனை வெற்றியடைந்தால் வரும் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் கொரோனா தடுப்பு ஊசி இந்தியாவில் அறிமுகம்..!

பரிசோதனை வெற்றியடைந்தால், வரும் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் கொரோனா தடுப்பு ஊசி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

டெல்லி: பரிசோதனை வெற்றியடைந்தால், வரும் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் கொரோனா தடுப்பு ஊசி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை குணப்படுத்த மருந்து மற்றும் தடுப்பு ஊசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் மிக தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், இந்தியாவை சேர்ந்த

பாரத் பயோடெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பு ஊசி

சோதனை வெற்றியடைந்தால், வரும் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் இந்தியாவில் அறிமுகம் செய்ய ஐ.சி.எம்.ஆர். திட்டமிட்டுள்ளது.

ஹைதராபாத்தில் இயங்கி வரும் பாரத் பயோடெக் நிறுவனம் கண்டறிந்த கொரோனா தடுப்பு மருந்தான "கோவாக்ஸின்" எனும் மருந்தை மனிதர்களிடம் சோதனை செய்ய அண்மையில் மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்தது.

குறிப்பாக, இரண்டு கட்டங்களாக நடைபெறும் இதன் பரிசோதனை வரும் ஜூலை 7ம் தேதி தொடங்க உள்ள நிலையில், அந்த நிறுவனத்துக்கு ஐ.சி.எம்.ஆர். இயக்குநர் பல்ராம் பார்கவா சமீபத்தில் எழுதிய கடிதத்தில், பரிசோதனை முயற்சிகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும் பரிசோதனை வெற்றியடைந்தால், ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் தடுப்பு மருந்தை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 6.2 லட்சத்திற்கு அதிகமான மக்கள் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தடுப்பு ஊசி மருத்துவர்கள் மற்றும் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...