கோவை: கோவையில் கொரோனா கணக்கெடுப்பு பணி செய்வதற்கு ஒரு வார்டுக்கு 15 பேர் வீதம் மொத்தம் 1,500 பேர் நியமிக்கப்பட்டு உள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவை: கோவையில் கொரோனா கணக்கெடுப்பு பணி செய்வதற்கு ஒரு வார்டுக்கு 15 பேர் வீதம் மொத்தம் 1,500 பேர் நியமிக்கப்பட்டு உள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
அதன் ஒரு பகுதியாக, வீடுவீடாக கணக்கெடுப்பு பணி செய்வதற்கு ஒரு வார்டுக்கு 15 பேர் வீதம் மொத்தம் 1,500 பேர் நியமிக்கப்பட்டு கணக்கெடுத்து வருவதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி தெரிவித்துள்ளார்.
இந்த கணக்கெடுப்பு பணியின் போது கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனரா, வெளியூர், வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் யார், வீட்டில் 60 வயதுக்கு மேல் உள்ள முதியவர்கள் உள்ளனரா, அவர்களுக்கு சர்க்கரை நோய் உள்ளிட்ட பாதிப்புகள் இருக்கிறதா போன்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
அதன் ஒரு பகுதியாக, வீடுவீடாக கணக்கெடுப்பு பணி செய்வதற்கு ஒரு வார்டுக்கு 15 பேர் வீதம் மொத்தம் 1,500 பேர் நியமிக்கப்பட்டு கணக்கெடுத்து வருவதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி தெரிவித்துள்ளார்.
இந்த கணக்கெடுப்பு பணியின் போது கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனரா, வெளியூர், வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் யார், வீட்டில் 60 வயதுக்கு மேல் உள்ள முதியவர்கள் உள்ளனரா, அவர்களுக்கு சர்க்கரை நோய் உள்ளிட்ட பாதிப்புகள் இருக்கிறதா போன்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.