கோவை: கோவை அடுத்த குறிச்சி பகுதியில் தனிமையின் காரணமாக விரக்தியில் முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை அடுத்த குறிச்சி பகுதியில் தனிமையின் காரணமாக விரக்தியில் முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை குறிச்சி காந்திஜி சாலையில் வசித்து வருபவர் சுப்ரமணி(59). இவரது மனைவி கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு காலமானார். இவரது ஒரே மகள் திருமணமாகி கரூரில் வசித்து வருகிறார். தனியாக இருந்து வந்த சுப்ரமணியை அவரது வீட்டின் அருகில் வசிக்கும் உறவினரான ஜுலி கவனித்து வந்துள்ளார்.
சுப்ரமணியின் மகள் மாதம் ஒரு முறை தந்தையை காண வருபவர், அவருக்கு தேவையான பணம் மற்றும் உதவிகளை செய்து தருவது வழக்கம். கடந்த சில மாதமாக அவரால் வர முடியாத சூழலில் தனிமையில் வசித்து வந்த சுப்ரமணி விரக்தியின் காரணமாக தடை செய்யப்பட்ட சாணி பவுடரை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அவரது உறவினர் ஜூலி அளித்த புகாரின் பேரில் போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது உடலை உடற்கூறு ஆய்விற்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தனிமையின் காரணமாக முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை குறிச்சி காந்திஜி சாலையில் வசித்து வருபவர் சுப்ரமணி(59). இவரது மனைவி கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு காலமானார். இவரது ஒரே மகள் திருமணமாகி கரூரில் வசித்து வருகிறார். தனியாக இருந்து வந்த சுப்ரமணியை அவரது வீட்டின் அருகில் வசிக்கும் உறவினரான ஜுலி கவனித்து வந்துள்ளார்.
சுப்ரமணியின் மகள் மாதம் ஒரு முறை தந்தையை காண வருபவர், அவருக்கு தேவையான பணம் மற்றும் உதவிகளை செய்து தருவது வழக்கம். கடந்த சில மாதமாக அவரால் வர முடியாத சூழலில் தனிமையில் வசித்து வந்த சுப்ரமணி விரக்தியின் காரணமாக தடை செய்யப்பட்ட சாணி பவுடரை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அவரது உறவினர் ஜூலி அளித்த புகாரின் பேரில் போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது உடலை உடற்கூறு ஆய்விற்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தனிமையின் காரணமாக முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.