நீலகிரி: நீலகிரியில் இயற்கையாக உயிரிழந்த முதியவரை கொரோனாவால் இறந்ததாக சமூக வலைத்தளங்களில் தவறான தகவலை பரப்பிய கார்த்திக் என்பவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
நீலகிரி: நீலகிரியில் இயற்கையாக உயிரிழந்த முதியவரை கொரோனாவால் இறந்ததாக சமூக வலைத்தளங்களில் தவறான தகவலை பரப்பிய கார்த்திக் என்பவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் நல்லப்பன் தெரு பகுதியில் வசித்த வருபவர் வீரப்பன், 89 வயதான இவர் கடந்த 22ம் தேதி வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார். இவரது உடல் மருத்துவ அதிகாரிகளின் சோதனைக்குப் பின், எந்த நோய் தொற்றும் இல்லை என்று உறுதி செய்தபின் வெலிங்டன் மயானத்தில் அதிக கூட்டம் இல்லாமல் அரசு விதிகள் படி முழு பாதுகாப்பு கவசங்களுடன் அடக்கம் செய்யப்பட்டது.
இதனிடையே, இவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட வீடியோவை, கொரோனாவால் இறந்த முதியவர் தகுந்த பாதுகாப்பு இல்லாமல் புதைத்து விட்டதாக தவறான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரப்பியது.
இது குறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், தவறான தகவலைப் பரப்பியதாக கார்த்திக் மற்றும் அட்மின்கள் உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து காவல் அதிகாரிகள் கூறுகையில், சமூக வளைதலங்களில் தவறான தகவலைப் பரப்பி, மக்களை பீதியடையச் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் நல்லப்பன் தெரு பகுதியில் வசித்த வருபவர் வீரப்பன், 89 வயதான இவர் கடந்த 22ம் தேதி வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார். இவரது உடல் மருத்துவ அதிகாரிகளின் சோதனைக்குப் பின், எந்த நோய் தொற்றும் இல்லை என்று உறுதி செய்தபின் வெலிங்டன் மயானத்தில் அதிக கூட்டம் இல்லாமல் அரசு விதிகள் படி முழு பாதுகாப்பு கவசங்களுடன் அடக்கம் செய்யப்பட்டது.
இதனிடையே, இவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட வீடியோவை, கொரோனாவால் இறந்த முதியவர் தகுந்த பாதுகாப்பு இல்லாமல் புதைத்து விட்டதாக தவறான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரப்பியது.
இது குறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், தவறான தகவலைப் பரப்பியதாக கார்த்திக் மற்றும் அட்மின்கள் உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து காவல் அதிகாரிகள் கூறுகையில், சமூக வளைதலங்களில் தவறான தகவலைப் பரப்பி, மக்களை பீதியடையச் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.