கோவை: தமிழக காவல்துறையில் முதல் முறையாக கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புகார் அளிக்க வருவோரை ஜூம் செயலி மூலம் விசாரணை செய்யும் முறை கோவையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கோவை: தமிழக காவல்துறையில் முதல் முறையாக கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புகார் அளிக்க வருவோரை ஜூம் செயலி மூலம் விசாரணை செய்யும் முறை கோவையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று வேகமாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனா தொற்றோடு அரசு அலுவலகங்களுக்கு வருவதால் அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை நோய் தொற்றால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், கோவையில் உள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலக ஊழியருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, அங்கு புகார் அளிக்க வருபவர்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை நேரில் சந்திக்க அனுமதி இல்லை. அதற்கு பதிலாக இன்று முதல் வரவேற்பு அறையில் இருந்து ஜூம் செயலி மூலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்க சிறப்பு எற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக லேப் டாப் பொருத்தப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சம்பந்தப்பட்ட புகார்தாரரிடம் வீடியோ மூலம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்து வருகிறார். இன்று காலை முதல் இந்த புதிய முறை நடைமுறைக்கு வந்துள்ளது.
தமிழக காவல்துறையில் முதன் முறையாக ஜூம் செயலி மூலம் விசாரணை செய்யும் முறையை கோவை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.