கோவை: மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட காட்டு யானை வனத்துறையினரின் சிகிச்சைக்குப் பின் வனப்பகுதிக்குள் சென்றது.
கோவை: மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட காட்டு யானை வனத்துறையினரின் சிகிச்சைக்குப் பின் வனப்பகுதிக்குள் சென்றது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பெத்திகுட்டை பவானி சாகர் நீர் தேக்க பகுதியில் உடல்நலம் பாதிக்கப்பட்ட ஆண் காட்டு யானை அந்த பகுதியில் கீழே விழுந்து எழுந்து நடக்க முடியாமல் படுத்து கிடந்தது.
இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற சிறுமுகை வனத்துறையினர், கால்நடை மருத்துவக்குழுவினை வரவழைத்து அதற்கு சிகிச்சை அளித்தனர்.
வனத்துறை கால்நடை மருத்துவர் சுகுமார் தலைமையில் மூன்று மருத்துவர்கள் கொண்ட மருத்துவக் குழுவினர் உடல்நலம் பாதிக்கப்பட்ட அந்த யானைக்கு குளுக்கோஸ், நோய் எதிர்ப்பு சக்தி மருத்துகள், ஊட்டசத்து மருந்துகள் ஆகியவற்றை கொடுத்து சிகிச்சை அளித்தனர்.
இதையடுத்து, மூன்று மணி நேர சிகிச்சைக்கு பின்னர் நேற்று இரவு அந்த காட்டு யானை உடல் நலம் பெற்று எழுந்து மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பெத்திகுட்டை பவானி சாகர் நீர் தேக்க பகுதியில் உடல்நலம் பாதிக்கப்பட்ட ஆண் காட்டு யானை அந்த பகுதியில் கீழே விழுந்து எழுந்து நடக்க முடியாமல் படுத்து கிடந்தது.
இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற சிறுமுகை வனத்துறையினர், கால்நடை மருத்துவக்குழுவினை வரவழைத்து அதற்கு சிகிச்சை அளித்தனர்.
வனத்துறை கால்நடை மருத்துவர் சுகுமார் தலைமையில் மூன்று மருத்துவர்கள் கொண்ட மருத்துவக் குழுவினர் உடல்நலம் பாதிக்கப்பட்ட அந்த யானைக்கு குளுக்கோஸ், நோய் எதிர்ப்பு சக்தி மருத்துகள், ஊட்டசத்து மருந்துகள் ஆகியவற்றை கொடுத்து சிகிச்சை அளித்தனர்.
இதையடுத்து, மூன்று மணி நேர சிகிச்சைக்கு பின்னர் நேற்று இரவு அந்த காட்டு யானை உடல் நலம் பெற்று எழுந்து மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.