கோவை: கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இந்திய சீன எல்லையில் ஏற்பட்ட மோதலில் தேசத்திற்காக உயிர் நீத்த 20 ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம் மற்றும் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
கோவை: கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இந்திய சீன எல்லையில் ஏற்பட்ட மோதலில் தேசத்திற்காக உயிர் நீத்த 20 ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம் மற்றும் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

கோவை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் குறிப்பாக இருகூர், சுல்தான்பேட்டை, தொண்டாமுத்தூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் படங்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தி மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்திய சீன எல்லையில் இந்திய நிலத்தை சீனா ஆக்கிரமித்ததாக சொல்லப்பட்டு வருகிறது. அதன் உண்மைத்தன்மையை பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும். இந்திய நிலப் பகுதிக்குள் சீன ராணுவம் நுழைந்து ஏழு வாரங்களாக மத்திய அரசு மௌனம் காத்தும், ஆயுதங்கள் இன்றி நமது ராணுவ வீரர்களை அனுப்பியதும் நிர்வாக திறமையை காட்டுகிறது.
ஆகவே, இந்திய நிலத்தை மத்திய அரசு சீதனமாக மீட்டு சீன ராணுவத்தை வெளியேற்ற வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை காங்கிரஸ் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கையில் பிடித்தபடி அமர்ந்திருந்தனர்.

கோவை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் குறிப்பாக இருகூர், சுல்தான்பேட்டை, தொண்டாமுத்தூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் படங்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தி மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்திய சீன எல்லையில் இந்திய நிலத்தை சீனா ஆக்கிரமித்ததாக சொல்லப்பட்டு வருகிறது. அதன் உண்மைத்தன்மையை பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும். இந்திய நிலப் பகுதிக்குள் சீன ராணுவம் நுழைந்து ஏழு வாரங்களாக மத்திய அரசு மௌனம் காத்தும், ஆயுதங்கள் இன்றி நமது ராணுவ வீரர்களை அனுப்பியதும் நிர்வாக திறமையை காட்டுகிறது.
ஆகவே, இந்திய நிலத்தை மத்திய அரசு சீதனமாக மீட்டு சீன ராணுவத்தை வெளியேற்ற வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை காங்கிரஸ் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கையில் பிடித்தபடி அமர்ந்திருந்தனர்.