கோவை: சாத்தான்குளம் விவகாரம் போல இனி எந்த சம்பவமும் நடைபெறக் கூடாது என்பதற்காக காவல் துறையினருக்கு டி.ஜி.பி மூலம் அறிவுரைகள் வழங்கப்பட்டு இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கோவை: சாத்தான்குளம் விவகாரம் போல இனி எந்த சம்பவமும் நடைபெறக் கூடாது என்பதற்காக காவல் துறையினருக்கு டி.ஜி.பி மூலம் அறிவுரைகள் வழங்கப்பட்டு இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேசிய போது, சாத்தான்குளம் வியாபாரிகள் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு கோவில்பட்டி சிறையில் மரணமடைந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், சாத்தான்குளம் விவகாரம் போல இனி எந்த சம்பவம் நடைபெறக் கூடாது என்பதற்காக காவல் துறையினருக்கு டி.ஜி.பி மூலம் அறிவுரைகள் வழங்கப்பட்டு இருப்பதாகவும் கொரோனா சோதனை நேரத்தில் பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என கடுமையாக காவல் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணை நடைபெற்று வருகின்றது எனவும் சென்னை உயர்நீதிமன்றம் இந்த விவகாரத்தை தானாக விசாரிக்கின்றது எனவும் மாஜிஸ்திரேட் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்வார் எனவும் உயர்நீதிமன்றம் வழங்கும் உத்தரவினை இந்த அரசு அமல்படுத்தும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேசிய போது, சாத்தான்குளம் வியாபாரிகள் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு கோவில்பட்டி சிறையில் மரணமடைந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், சாத்தான்குளம் விவகாரம் போல இனி எந்த சம்பவம் நடைபெறக் கூடாது என்பதற்காக காவல் துறையினருக்கு டி.ஜி.பி மூலம் அறிவுரைகள் வழங்கப்பட்டு இருப்பதாகவும் கொரோனா சோதனை நேரத்தில் பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என கடுமையாக காவல் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணை நடைபெற்று வருகின்றது எனவும் சென்னை உயர்நீதிமன்றம் இந்த விவகாரத்தை தானாக விசாரிக்கின்றது எனவும் மாஜிஸ்திரேட் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்வார் எனவும் உயர்நீதிமன்றம் வழங்கும் உத்தரவினை இந்த அரசு அமல்படுத்தும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.