கோவை: கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகள் மற்றும் கடை வியாபாரிகளுக்கு கொரோனா பரவலை தடுக்க கடைபிடிக்க வேண்டியவை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுரை வழங்கினார்.
கோவை: கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகள் மற்றும் கடை வியாபாரிகளுக்கு கொரோனா பரவலை தடுக்க கடைபிடிக்க வேண்டியவை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுரை வழங்கினார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். இதையடுத்து காந்திபுரம் பேருந்து நிலையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.
அப்போது, அங்கிருந்த பொதுமக்களிடம் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார். பேருந்தில் அமர்ந்திருந்த பயணிகளிடம் கொரோனா பரவலை தடுக்க முகக்கவசம் அணிதல், தனி மனித இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்டவை குறித்து எடுத்துரைத்தார்.
மேலும், பேருந்து நிலையத்தில் இருந்த கடை வியாபாரிகளுக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுரை வழங்கினார். அப்போது உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். இதையடுத்து காந்திபுரம் பேருந்து நிலையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.
அப்போது, அங்கிருந்த பொதுமக்களிடம் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார். பேருந்தில் அமர்ந்திருந்த பயணிகளிடம் கொரோனா பரவலை தடுக்க முகக்கவசம் அணிதல், தனி மனித இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்டவை குறித்து எடுத்துரைத்தார்.
மேலும், பேருந்து நிலையத்தில் இருந்த கடை வியாபாரிகளுக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுரை வழங்கினார். அப்போது உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.