நீலகிரி: குன்னூர் அருகில் உள்ள கொலக்கம்பை காவல் நிலையம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்கள் ஒரே நாளில் கொரோனா பரவல் காரணமாக சீல் வைக்கப்பட்டதால் இப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
நீலகிரி: குன்னூர் அருகில் உள்ள கொலக்கம்பை காவல் நிலையம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்கள் ஒரே நாளில் கொரோனா பரவல் காரணமாக சீல் வைக்கப்பட்டதால் இப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் உள்ள கொலக்கம்பை காவல் நிலையத்தில் பணிபுரியும் 7 காவலர்கள் மற்றும் குன்னூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள ஒருவரையும் சுகாதாரத்துறையினர் கொரோனா பரிசோதனைக்காக கடந்த சில நாட்களுக்கு முன் உட்படுத்தினர்.
இந்த நிலையில், இன்று இவர்கள் அனைவரையும் ஆம்புலன்ஸ் மூலம் உதகை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதனைத் தொடர்ந்து கொலக்கம்பை காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு கெந்தளா என்ற பகுதிக்கு மாற்றப்பட்டது.
இதேபோல, குன்னூர் வட்டாட்சியர் அலுவலகத்தின் முகப்பு வாயிலும் மூடி சீல் வைக்கப்பட்டது. கொலக்கம்பை தூதூர்மட்டம் பகுதியில் ஏற்கனவே சிலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அங்கிருந்து காவலர் பணிக்கு வந்த 7 காவலர்கள் மற்றும் கொரோனா பணியில் ஈடுபட்டிருந்த தாலுக்கா அலுவலக அதிகாரியையும் சுகாதார அதிகாரிகள் அழைத்துச் சென்றதால் கொலக்கம்பை காவல் நிலையம் மற்றும் குன்னூர் வட்டாட்சியர் அலுவலகம் மூடி சீல் வைக்கப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் உள்ள கொலக்கம்பை காவல் நிலையத்தில் பணிபுரியும் 7 காவலர்கள் மற்றும் குன்னூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள ஒருவரையும் சுகாதாரத்துறையினர் கொரோனா பரிசோதனைக்காக கடந்த சில நாட்களுக்கு முன் உட்படுத்தினர்.
இந்த நிலையில், இன்று இவர்கள் அனைவரையும் ஆம்புலன்ஸ் மூலம் உதகை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதனைத் தொடர்ந்து கொலக்கம்பை காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு கெந்தளா என்ற பகுதிக்கு மாற்றப்பட்டது.
இதேபோல, குன்னூர் வட்டாட்சியர் அலுவலகத்தின் முகப்பு வாயிலும் மூடி சீல் வைக்கப்பட்டது. கொலக்கம்பை தூதூர்மட்டம் பகுதியில் ஏற்கனவே சிலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அங்கிருந்து காவலர் பணிக்கு வந்த 7 காவலர்கள் மற்றும் கொரோனா பணியில் ஈடுபட்டிருந்த தாலுக்கா அலுவலக அதிகாரியையும் சுகாதார அதிகாரிகள் அழைத்துச் சென்றதால் கொலக்கம்பை காவல் நிலையம் மற்றும் குன்னூர் வட்டாட்சியர் அலுவலகம் மூடி சீல் வைக்கப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.