கோவையில் இன்று ஒரு வயது ஆண் குழந்தை, ஊட்டி செவிலியர் உட்பட 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

கோவை: கோவையில் இன்று ஒரு வயது ஆண் குழந்தை, ஊட்டி செவிலியர் உட்பட 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கோவை: கோவையில் இன்று ஒரு வயது ஆண் குழந்தை, ஊட்டி செவிலியர் உட்பட 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கோவையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும்.நிலையில், இன்று 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

2 குழந்தைகள், 5 பெண்கள் மற்றும் 9 ஆண்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. ஊட்டி அரசு மருத்துவமனையில் பணியாற்றிய சவுரிபாளையத்தை சேர்ந்த 34 வயது பெண் செவிலியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விமானம் மூலம் வந்த காளப்பட்டியை சேர்ந்த 24 வயது பெண், மதுரையில் இருந்து சாலை மார்க்கமாக வந்த ஹோப் காலேஜ் பகுதியை சேர்ந்த 53 வயது பெண்ணிற்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

கொரோனா பாதித்தவருடன் தொடர்பில் இருந்த வெள்ளக்கிணறு பகுதியை சேர்ந்த 54 வயது ஆண், காட்டூரை சேர்ந்த 66 வயது ஆணிற்கு தொற்று உறுதியாகியுள்ளது.

மேலும், சரவணம்பட்டியை சேர்ந்த ஒரு வயது ஆண் குழந்தை மற்றும் தெலுங்குபாளையத்தை சேர்ந்த 4 வயது பெண் குழந்தைக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. டவுன்ஹாலை சேர்ந்த 27 வயது, கோட்டூரை சேர்ந்த 23 வயது பெண் காவலர், வடவள்ளியை சேர்ந்த 69 வயது ஆண், ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த 31 வயது ஆண், கரடிமடையை சேர்ந்த 35 வயது ஆணிற்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இதேபோல ஒண்டிபுதூரை சேர்ந்த 60 வயது ஆண், சவுரிபாளையத்தை சேர்ந்த 35 வயது ஆண், பிஎல்எஸ் நகரை சேர்ந்த 49 வயது ஆண் மற்றும் 59 வயது பெண்ணிற்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இதனிடையே, கோவையில் கொரோனா பாதிப்பு 300 ஐ கடந்துள்ளது. கடந்த 24 நாட்களில் 168 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...