திருப்பூர்: திருப்பூரில் மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என்று பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் எருமை மாட்டிற்கு மனு அளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: திருப்பூரில் மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என்று பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் எருமை மாட்டிற்கு மனு அளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கிய மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள், மத்திய அரசு அறிவுறுத்திய ஆறு மாதகால அவகாசத்தை கருத்தில் கொள்ளாமல் மகளிர் சுய உதவிக் குழுக்களிடம் தவணைத் தொகையை கேட்டு வீட்டிற்கு வரும் மைக்ரோ பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் வீட்டில் உள்ள பெண்களிடம் தரக்குறைவாக பேசுவதாகவும், அதே போல் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டுவதோடு, கீழ்த்தரமான வார்த்தைகளை பேசுவதாக பாதிக்கப்பட்ட பெண்கள் குற்றம்சாட்டினர்.

இந்த நிலையில், இது குறித்து மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயனை சந்தித்து நடவடிக்கை எடுக்கக் கோரி, மூன்று மாதங்களில் 20 முறைக்கு மேல் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என்று பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் திருப்பூர் வீரபாண்டி பகுதியில், மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, இறுதியில் எருமை மாட்டிற்கு மனு கொடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கிய மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள், மத்திய அரசு அறிவுறுத்திய ஆறு மாதகால அவகாசத்தை கருத்தில் கொள்ளாமல் மகளிர் சுய உதவிக் குழுக்களிடம் தவணைத் தொகையை கேட்டு வீட்டிற்கு வரும் மைக்ரோ பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் வீட்டில் உள்ள பெண்களிடம் தரக்குறைவாக பேசுவதாகவும், அதே போல் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டுவதோடு, கீழ்த்தரமான வார்த்தைகளை பேசுவதாக பாதிக்கப்பட்ட பெண்கள் குற்றம்சாட்டினர்.
இந்த நிலையில், இது குறித்து மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயனை சந்தித்து நடவடிக்கை எடுக்கக் கோரி, மூன்று மாதங்களில் 20 முறைக்கு மேல் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என்று பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் திருப்பூர் வீரபாண்டி பகுதியில், மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, இறுதியில் எருமை மாட்டிற்கு மனு கொடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.