கோவை: கோவை மாவட்ட எல்லைகளில் காவல்துறையினர் இரண்டாவது நாளாக மேற்கொண்ட வாகன சோதனையில் இ-பாஸ் இல்லாமல் மாவட்டத்திற்குள் வர முற்பட்ட மற்றும் அதிகப்படியான நபர்களை ஏற்றி வந்த 54 வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை: கோவை மாவட்ட எல்லைகளில் காவல்துறையினர் இரண்டாவது நாளாக மேற்கொண்ட வாகன சோதனையில் இ-பாஸ் இல்லாமல் மாவட்டத்திற்குள் வர முற்பட்ட மற்றும் அதிகப்படியான நபர்களை ஏற்றி வந்த 54 வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
கொரோனா பரவுவதை தடுக்க சென்னையில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மேற்கு மண்டல காவல் துறை தலைவர் பெரியய்யா இ.கா.ப., கோவை சரக காவல் துறை துணைத் தலைவர் கார்த்திகேயன், இ.கா.ப., ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார், இ.கா.ப., அவர்கள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்து மாநில மற்றும் மாவட்ட எல்லைகளில் அமைந்துள்ள சோதனைச் சாவடிகளிலும் வாகன சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று கோவை மாவட்ட எல்லையான தெக்கலூர் எஸ். பி.அப்பரல்ஸ் அருகே அமைந்துள்ள சோதனை சாவடியில் இ-பாஸ் இல்லாமல் சென்னையில் இருந்து கோவை மாவட்டத்திற்குள் நுழைய முற்பட்ட 4 கார்கள் மற்றும் அனுமதிக்கப்பட்ட நபர்களுக்கு மேல் அதிகப்படியான நபர்களை ஏற்றி வந்த 21 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
அதே போல் இன்று இரண்டாவது நாளாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெக்கலூர் எஸ். பி.அப்பரல்ஸ், கஞ்சபள்ளி, வாளையார், காங்கேயம்பாளையம், கோபாலபுரம் உள்ளிட்ட இடங்களில் அமைந்துள்ள சோதனை சவடிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு சோதனை சாவடிகளில் பணியில் இருந்த காவலர்களுக்கு face shield உள்ளிட்ட பாதுகாப்பு கவசங்கள் வழங்கி தீவிர சோதனையை முடுக்கி விட்டதின் பேரில் இ - பாஸ் இல்லாமல் மாவட்டத்திற்குள் வர முற்பட்ட 16 நான்கு சக்கர வாகனங்களும், 8 இரண்டு சக்கர வாகனங்களும் விதிமுறைகளை மீறி அதிகப்படியான நபர்களை ஏற்றி வந்த 29 நான்கு சக்கர வாகனங்களும் 1 இரண்டு சக்கர வாகனமும் ஆக மொத்தம் 54 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட காவல் துறையின் இந்த அதிரடி நடவடிக்கை தொடரும் என்பதால் பொதுமக்கள் இது போன்ற அத்துமீறல்களை தவிர்க்குமாறு கோவை மாவட்ட காவல் துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.