கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், தொற்று பாதிக்கப்படும் பகுதிகள் மாநகராட்சி உதவியுடன் தகர சீட்டுகள் மூலம் மக்கள் நடமாட்டத்தை தடுக்க அடைக்கப்பட்டு வருகிறது.
கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், தொற்று பாதிக்கப்படும் பகுதிகள் மாநகராட்சி உதவியுடன் தகர சீட்டுகள் மூலம் மக்கள் நடமாட்டத்தை தடுக்க அடைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள ஜி ஆர் டி நகைக்கடை ஊழியர்கள் மூன்று பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று காந்திபுரம் மூன்றாவது, நான்காவது மற்றும் பத்தாவது தெரு, நேரு வீதியும், தகர சீட்டுகள் மூலம் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன.
மேலும், இங்கு உள்ள பிரபல சென்னை மொபைல் கடை அதிபருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், அப்பகுதி உள்ள தெருக்கள் மூடப்பட்டுள்ளது.

அங்கு கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் வீதிக்குள் செல்ல தடை செய்யப்பட்டு, தடை செய்யப்பட்ட பகுதி உள்ளே யாரும் செல்ல அனுமதி இல்லை என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னையில் இருந்து கோவை வந்த 10 வயது சிறுவனுக்கு கொரோனா அறிகுறி இருந்ததால் அந்த சிறுவன் காந்திபுரம் நேருவீதியில் உள்ள தனியார் ஹோடலில் தங்க வைக்கப்பட்டிருந்தார். இந்த சூழலில், அந்த சிறுவனுக்கு இன்று வைரஸ் தொற்று உறுதியானது. இதனால், நேருவீதியும் தற்போது அடைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள ஜி ஆர் டி நகைக்கடை ஊழியர்கள் மூன்று பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று காந்திபுரம் மூன்றாவது, நான்காவது மற்றும் பத்தாவது தெரு, நேரு வீதியும், தகர சீட்டுகள் மூலம் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன.
மேலும், இங்கு உள்ள பிரபல சென்னை மொபைல் கடை அதிபருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், அப்பகுதி உள்ள தெருக்கள் மூடப்பட்டுள்ளது.
அங்கு கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் வீதிக்குள் செல்ல தடை செய்யப்பட்டு, தடை செய்யப்பட்ட பகுதி உள்ளே யாரும் செல்ல அனுமதி இல்லை என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னையில் இருந்து கோவை வந்த 10 வயது சிறுவனுக்கு கொரோனா அறிகுறி இருந்ததால் அந்த சிறுவன் காந்திபுரம் நேருவீதியில் உள்ள தனியார் ஹோடலில் தங்க வைக்கப்பட்டிருந்தார். இந்த சூழலில், அந்த சிறுவனுக்கு இன்று வைரஸ் தொற்று உறுதியானது. இதனால், நேருவீதியும் தற்போது அடைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.