வால்பாறையில் இனிமேல் காலை 7 மணி முதல் மாலை 5 வரை மட்டுமே கடைகள் இயக்க அனுமதி - வட்டாசியர் உத்தரவு
கோவை: கொரோனா தொற்று வேகமாக பரவிவருவதால் வால்பாறையில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே இனிமேல்கடைகள் இயக்கப்படும் என வியாபாரிகள் - வட்டாட்சியர் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வேகமாக பரவிய கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் 23 ஆம் தேதி முதல் கடைகள் இயக்குவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் 5 ஆம் கட்ட ஊரடங்கில், சில தளர்வுகள் வழங்கப்பட்டதன் அடிப்படையில் தற்போது அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் இரவு 8 வரை கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்று வருகிறது .

இந்த நிலையில் மீண்டும் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், வால்பாறையில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளை திறப்பதற்கான அனுமதி நேரம் குறைக்க வேண்டும் எனமுடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி, இன்று வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் ராஜா , காவல் ஆய்வாளர் மகேஸ்வரி தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை கடைகள் இயங்கவேண்டும் எனவும்,கடைகளில் பணியாற்றுபவர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிவதுடன் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்என்றுமுடிவெடுக்கப்பட்டது.

மேலும் அரசு பேருந்துகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் பேருந்துகள் இயக்கப்படுவதாக அதிகாரிகளிடம்,வியாபாரிகள் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து, இது சம்பந்தமாக அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளருடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டாட்சியர் உறுதியளித்துள்ளார்.
தமிழகத்தில் வேகமாக பரவிய கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் 23 ஆம் தேதி முதல் கடைகள் இயக்குவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் 5 ஆம் கட்ட ஊரடங்கில், சில தளர்வுகள் வழங்கப்பட்டதன் அடிப்படையில் தற்போது அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் இரவு 8 வரை கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்று வருகிறது .
இந்த நிலையில் மீண்டும் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், வால்பாறையில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளை திறப்பதற்கான அனுமதி நேரம் குறைக்க வேண்டும் எனமுடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி, இன்று வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் ராஜா , காவல் ஆய்வாளர் மகேஸ்வரி தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை கடைகள் இயங்கவேண்டும் எனவும்,கடைகளில் பணியாற்றுபவர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிவதுடன் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்என்றுமுடிவெடுக்கப்பட்டது.
மேலும் அரசு பேருந்துகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் பேருந்துகள் இயக்கப்படுவதாக அதிகாரிகளிடம்,வியாபாரிகள் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து, இது சம்பந்தமாக அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளருடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டாட்சியர் உறுதியளித்துள்ளார்.