கோவை: கோவையில் உள்ள புறவழிச்சாலை மேம்பாலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் பயன்படுத்தும் முழுக்கவச ஆடைகளை மர்மநபர்கள் பல்வேறு பகுதிகளில் சொருகி சென்றுள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவையில் உள்ள புறவழிச்சாலை மேம்பாலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் பயன்படுத்தும் முழுக்கவச ஆடைகளை மர்மநபர்கள் பல்வேறு பகுதிகளில் சொருகி சென்றுள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இந்த நிலையில் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நேரடியாக சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் உள்ளிட்ட பலர், நோய்த்தொற்றில் இருந்து தங்களை பாதுகத்துக் கொள்ள உடல்முழுவதையும் மறைக்கும் பிபிஇ கிட்களை பயன்படுத்துகின்றனர்.
இந்த நிலையில் தொற்றுக்குள்ளான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படும் முககவசம், பிபிஇ கிட், கையுறை போன்றவற்றை பயன்படுத்திய, பின்னர் பாதுகாப்பாக அப்புறப்படுத்த உலக சுகாதார நிறுவனம் வழிகாட்டலின் படி நமது சுகாதாரத்துறை பல்வேறு வழிமுறைகளை கையாண்டு வருகிறது.

ஆனால், இன்று உக்கடம்- சுங்கம் செல்லும் மேம்பாலத்தின் ஓரங்களில் பிபிஇ கிட் என்ற முழு கவச ஆடைகள் மர்மமான முறையில் சொருகி வைக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தகவலறிந்து வந்த பொதுமக்கள் நோய் தொற்றுக்கு உள்ளாக்கும் துணிகள் எப்படி இங்கு வந்தது என ஆவேசம் அடைந்தனர்.

இதைத் தொடர்ந்து காவல் துறைக்கும், சுகாதாரத்துறைக்கும் பொதுமக்கள் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வந்த உக்கடம் போலீசார் மருத்துவர்கள் பயன்படுத்தும் ஆடைகள் எப்படி இங்கு வந்தது என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல, இதை அப்புறப்படுத்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உலகை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இந்த நிலையில் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நேரடியாக சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் உள்ளிட்ட பலர், நோய்த்தொற்றில் இருந்து தங்களை பாதுகத்துக் கொள்ள உடல்முழுவதையும் மறைக்கும் பிபிஇ கிட்களை பயன்படுத்துகின்றனர்.
இந்த நிலையில் தொற்றுக்குள்ளான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படும் முககவசம், பிபிஇ கிட், கையுறை போன்றவற்றை பயன்படுத்திய, பின்னர் பாதுகாப்பாக அப்புறப்படுத்த உலக சுகாதார நிறுவனம் வழிகாட்டலின் படி நமது சுகாதாரத்துறை பல்வேறு வழிமுறைகளை கையாண்டு வருகிறது.
ஆனால், இன்று உக்கடம்- சுங்கம் செல்லும் மேம்பாலத்தின் ஓரங்களில் பிபிஇ கிட் என்ற முழு கவச ஆடைகள் மர்மமான முறையில் சொருகி வைக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தகவலறிந்து வந்த பொதுமக்கள் நோய் தொற்றுக்கு உள்ளாக்கும் துணிகள் எப்படி இங்கு வந்தது என ஆவேசம் அடைந்தனர்.
இதைத் தொடர்ந்து காவல் துறைக்கும், சுகாதாரத்துறைக்கும் பொதுமக்கள் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வந்த உக்கடம் போலீசார் மருத்துவர்கள் பயன்படுத்தும் ஆடைகள் எப்படி இங்கு வந்தது என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல, இதை அப்புறப்படுத்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.