கோவை: கோவையில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட அமமுக பெண் பிரமுகரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோவையில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட அமமுக பெண் பிரமுகரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் கஞ்சா விற்பனை தொடர்ந்து அதிகரித்து வண்ணம் உள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் உத்தரவின் பேரில் அவ்வப்போது போலீசார் வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கோவை வடவள்ளி அருகே உள்ள குருசாமி நகரில் நேற்று இரவு வடவள்ளி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி காரில் இருந்தவரிடம் விசாரணை மேற்கொண்ட போது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்த போலீசார் காரில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அந்த காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் காரில் இருந்த பெண்மணியிடம் விசாரணை மேற்கொண்டபோது, திருப்பூர் மாவட்டம் நம்பியாம்பாளையத்தை சேர்ந்த ஜெயமணி என்பதும் அமமுகவை சார்ந்த பெண் பிரமுகரான இவர் கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து, அவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரசியல் பிரமுகர் ஒருவர் கஞ்சா கடத்தி வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவர் பல்வேறு போலியான அடையாள அட்டைகளை வைத்து இருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.