திருப்பூர்: சென்னையில் இருந்து திருப்பூர் வந்த பெண் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் அவர் தங்கியிருந்த தெரு நுழைவாயிலில் மாநகராட்சி சார்பில் தடுப்புகள் போடப்பட்டு, போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர்: சென்னையில் இருந்து திருப்பூர் வந்த பெண் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் அவர் தங்கியிருந்த தெரு நுழைவாயிலில் மாநகராட்சி சார்பில் தடுப்புகள் போடப்பட்டு, போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட முத்து நகர் இரண்டாவது பகுதியை சேர்ந்த குடும்பத்தினர் சென்னையில் இருந்து சிறப்பு விமானம் மூலம் இன்று கோவை மார்க்கமாக திருப்பூர் வந்துள்ளனர்.
கோவை விமான நிலையத்தில் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் வீட்டில் தனிமைப்படுத்தி இருக்க அறிவுறுத்தப்பட்டனர். இன்று, பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில் அந்த வீட்டில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில் அவர் சுகாதாரத் துறையின் சார்பில் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

மேலும், அவர் தங்கியிருந்த பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
அதேபோல், அவருடன் வந்த அவரது கணவர் மற்றும் குழந்தைக்கு முதல் கட்ட சோதனையில் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதை தொடர்ந்து, அப்பகுதி கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட முத்து நகர் இரண்டாவது பகுதியை சேர்ந்த குடும்பத்தினர் சென்னையில் இருந்து சிறப்பு விமானம் மூலம் இன்று கோவை மார்க்கமாக திருப்பூர் வந்துள்ளனர்.
கோவை விமான நிலையத்தில் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் வீட்டில் தனிமைப்படுத்தி இருக்க அறிவுறுத்தப்பட்டனர். இன்று, பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில் அந்த வீட்டில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில் அவர் சுகாதாரத் துறையின் சார்பில் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
மேலும், அவர் தங்கியிருந்த பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
அதேபோல், அவருடன் வந்த அவரது கணவர் மற்றும் குழந்தைக்கு முதல் கட்ட சோதனையில் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதை தொடர்ந்து, அப்பகுதி கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.