திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் அதிகரித்து வரும் தீண்டாமை கொடுமைகள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி சாதிய ஒழிப்பு கூட்டியக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் அதிகரித்து வரும் தீண்டாமை கொடுமைகள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி சாதிய ஒழிப்பு கூட்டியக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம் அவினாசி பழங்கரை ஊராட்சிக்குட்பட்ட தேவம்பாளையம் பகுதியில் வசிக்கும் லோகநாதன் என்ற தலித் சமுதாயத்தை சேர்ந்தவரை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கூறியவர்கள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரியும், பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட லோகநாதனை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும், திருப்பூர் மாவட்டம் பல்லடம் முததாண்டிபாளையம் பட்டியல் சாதி மக்களுக்கு மயான வசதி செய்து தர வேண்டும் என்று சாதிய ஒழிப்பு கூட்டியக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதேபோல், திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதிகளில் தலித் மக்கள் வசிக்கும் வீடுகளுக்குள் சென்று அவர்கள் சமைத்த உணவுகளை எடுத்து வெளியில் வீசி அத்துமீறல்களில் ஈடுபட்ட நகராட்சி ஆணையர் மீது நடவடிக்கை எடுப்பதோடு, திருப்பூர் மாவட்டத்தில் அதிகரித்து வரும் தீண்டாமைக் கொடுமைகளிலிருந்து உரிய நடவடிக்கை எடுத்து, அவள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி திருப்பூர் குமரன் சிலை முன்பு சாதிய ஒழிப்பு கூட்டியக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம் அவினாசி பழங்கரை ஊராட்சிக்குட்பட்ட தேவம்பாளையம் பகுதியில் வசிக்கும் லோகநாதன் என்ற தலித் சமுதாயத்தை சேர்ந்தவரை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கூறியவர்கள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரியும், பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட லோகநாதனை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும், திருப்பூர் மாவட்டம் பல்லடம் முததாண்டிபாளையம் பட்டியல் சாதி மக்களுக்கு மயான வசதி செய்து தர வேண்டும் என்று சாதிய ஒழிப்பு கூட்டியக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதேபோல், திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதிகளில் தலித் மக்கள் வசிக்கும் வீடுகளுக்குள் சென்று அவர்கள் சமைத்த உணவுகளை எடுத்து வெளியில் வீசி அத்துமீறல்களில் ஈடுபட்ட நகராட்சி ஆணையர் மீது நடவடிக்கை எடுப்பதோடு, திருப்பூர் மாவட்டத்தில் அதிகரித்து வரும் தீண்டாமைக் கொடுமைகளிலிருந்து உரிய நடவடிக்கை எடுத்து, அவள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி திருப்பூர் குமரன் சிலை முன்பு சாதிய ஒழிப்பு கூட்டியக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.