திருப்பூர்: இரண்டு மாத ஊதியம் வழங்கப்படவில்லை என திருப்பூர் மாநகராட்சி ஒப்பந்தம் துப்புரவு பணியாளர்கள் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: இரண்டு மாத ஊதியம் வழங்கப்படவில்லை என திருப்பூர் மாநகராட்சி ஒப்பந்தம் துப்புரவு பணியாளர்கள் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாநகராட்சியின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளர்கள் சுமார் 900 பேர் பணிபுரிந்து வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காலத்திலும் விடுமுறை இல்லாமல் பணியாற்றிவந்த அவர்களுக்கு இன்னும் ஏப்ரல் மாதத்திற்கான ஊதியம் கூட வழங்கவில்லை என குற்றம் சாட்டினர்.

மேலும், ஏற்கனவே சிறப்பு ஊதியம் அறிவிக்கப்படாத தங்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக ஒப்பந்த அடிப்படையிலான ஊதியம் கூட வழங்கவில்லை எனவும், இதனால் தங்கள் அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க முடியாத சூழ்நிலையில் இருப்பதாக கூறி இன்று கருவம்பாளையம் மண்டல அலுவலகத்தில் பணியை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட நிர்வாகம் 420 ரூபாய் ஒப்பந்தம் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் நிலையிலும், வெறும் 300 ரூபாய் மட்டுமே வழங்குவதாகவும், ஆனால், அதையும் கூட கடந்த 2 மாதமாக வழங்கவில்லை என குற்றம் சாட்டினர்.

மாநகராட்சி நிர்வாகத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் மட்டுமே பணியை தொடருவோம் என தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பூர் மாநகராட்சியின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளர்கள் சுமார் 900 பேர் பணிபுரிந்து வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காலத்திலும் விடுமுறை இல்லாமல் பணியாற்றிவந்த அவர்களுக்கு இன்னும் ஏப்ரல் மாதத்திற்கான ஊதியம் கூட வழங்கவில்லை என குற்றம் சாட்டினர்.
மேலும், ஏற்கனவே சிறப்பு ஊதியம் அறிவிக்கப்படாத தங்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக ஒப்பந்த அடிப்படையிலான ஊதியம் கூட வழங்கவில்லை எனவும், இதனால் தங்கள் அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க முடியாத சூழ்நிலையில் இருப்பதாக கூறி இன்று கருவம்பாளையம் மண்டல அலுவலகத்தில் பணியை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட நிர்வாகம் 420 ரூபாய் ஒப்பந்தம் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் நிலையிலும், வெறும் 300 ரூபாய் மட்டுமே வழங்குவதாகவும், ஆனால், அதையும் கூட கடந்த 2 மாதமாக வழங்கவில்லை என குற்றம் சாட்டினர்.
மாநகராட்சி நிர்வாகத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் மட்டுமே பணியை தொடருவோம் என தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.