கோவை: கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக 33 பேரும் தனியார் மருத்துவமனைகளில் 4 பேரும் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக 33 பேரும் தனியார் மருத்துவமனைகளில் 4 பேரும் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்து வந்த நிலையில், 28 நாட்களுக்கு பிறகு கடந்த ஜூன் 2ம் தேதி 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, கோவையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகிறது.
இதில், வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து விமானம் மற்றும் சாலை மார்க்கமாக வந்தவர்கள் என கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.
குறிப்பாக, கடந்த 3 நாட்களில் அடுத்தடுத்து கொரோனா தொற்றால் அரசு மருத்துவமனையில் மூன்று பகுதிகள் மூடப்பட்டுள்ளது. இதனிடையே கோவையில் இன்று மேலும் 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கொரோனா பாதித்தவர்களுக்கு கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளதாகவும் தனியார் மருத்துவமனைகளில் 4 பேரும் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார துறை இணை இயக்குநர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்து வந்த நிலையில், 28 நாட்களுக்கு பிறகு கடந்த ஜூன் 2ம் தேதி 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, கோவையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகிறது.
இதில், வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து விமானம் மற்றும் சாலை மார்க்கமாக வந்தவர்கள் என கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.
குறிப்பாக, கடந்த 3 நாட்களில் அடுத்தடுத்து கொரோனா தொற்றால் அரசு மருத்துவமனையில் மூன்று பகுதிகள் மூடப்பட்டுள்ளது. இதனிடையே கோவையில் இன்று மேலும் 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கொரோனா பாதித்தவர்களுக்கு கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளதாகவும் தனியார் மருத்துவமனைகளில் 4 பேரும் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார துறை இணை இயக்குநர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.