திருப்பூர்: முகக் கவசம் இன்றி பொதுமக்கள் வெளியே நடமாடுவதை காணும் போது வருத்தமாக உள்ளதாக நேற்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் சமூக வலைதளங்களில் பதிவு செய்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
திருப்பூர்: முகக் கவசம் இன்றி பொதுமக்கள் வெளியே நடமாடுவதை காணும் போது வருத்தமாக உள்ளதாக நேற்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் சமூக வலைதளங்களில் பதிவு செய்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் 114 பேர் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின்னர் அனைவரும் நலமுடன் வீடு திரும்பியுள்ளனர் தற்பொழுது தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு இல்லாத மாவட்டமாக திருப்பூர் விளங்கி வருகிறது.
மேலும் திருப்பூர் மாவட்டம் பச்சை மண்டலமாகவும் விளங்கி வருகிறது இந்நிலையில், நேற்று காலை திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள மீன் மார்க்கெட்டில் மீன் வாங்குவதற்காக ஏராளமான பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடியதுடன் பெரும்பாலான மக்கள் முக கவசம் அணியாமலும் சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன், திருப்பூரில் தற்பொழுது பாதிப்பு இல்லை என்றாலும் பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் வெளியில் வரும் பொதுமக்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும் எனவும் தற்பொழுது பலரும் முககவசம் அணிவதில்லை எனவும் அதுபோன்று முகக்கவசம் அணியாதவர்களை கண்டால் வருத்தமாக உள்ளதாகவும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் உருக்கமாகப் பேசி வீடியோ ஒன்றை பதிவு செய்திருந்தார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது .