திருப்பூர்: திருப்பூரில் உள்ள நிறுவனங்களில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட வெளி மாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இதில் தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஆறு லட்சம் பேர் மற்றும் வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் 2 லட்சம் பேர் ஆவர்.
திருப்பூர்: திருப்பூரில் உள்ள நிறுவனங்களில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட வெளி மாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இதில் தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஆறு லட்சம் பேர் மற்றும் வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் 2 லட்சம் பேர் ஆவர்.
கொரோனா பாதிப்பின் காரணமாக நாடு முழுவதும் 58 வது கட்டமாக வருகிற 30 ஆம் தேதி வரை ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கின் காரணமாக வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வந்து கொண்டிருந்தனர். இதனால் அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பிவைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.
இதனைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்தில் இருந்து வடமாநில தொழிலாளர்களில் சொந்த ஊர்களுக்கு செல்ல விருப்பம் உள்ளவர்கள், வருவாய்த்துறை அதிகாரிகளிடம் செல்போன் எண் மற்றும் ஆதார் எண்ணை கொடுத்து பதிவு செய்து வருகிறார்கள். அதன்படி பல்வேறு கட்டங்களாக சிறப்பு ரெயில்களில் தொழிலாளர்கள் அனுப்பிவைக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், இன்று திருப்பூரில் இருந்து ஜார்கண்ட் மாநிலம் தன்பந்திற்கு ஒரு சிறப்பு ரெயில் சென்றது. அதில், 1,600 தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
முன்னதாக, திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு வந்தவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வழங்கி ரெயிலில் அனுப்பிவைக்கப்பட்டனர்.
கொரோனா பாதிப்பின் காரணமாக நாடு முழுவதும் 58 வது கட்டமாக வருகிற 30 ஆம் தேதி வரை ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கின் காரணமாக வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வந்து கொண்டிருந்தனர். இதனால் அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பிவைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.
இதனைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்தில் இருந்து வடமாநில தொழிலாளர்களில் சொந்த ஊர்களுக்கு செல்ல விருப்பம் உள்ளவர்கள், வருவாய்த்துறை அதிகாரிகளிடம் செல்போன் எண் மற்றும் ஆதார் எண்ணை கொடுத்து பதிவு செய்து வருகிறார்கள். அதன்படி பல்வேறு கட்டங்களாக சிறப்பு ரெயில்களில் தொழிலாளர்கள் அனுப்பிவைக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், இன்று திருப்பூரில் இருந்து ஜார்கண்ட் மாநிலம் தன்பந்திற்கு ஒரு சிறப்பு ரெயில் சென்றது. அதில், 1,600 தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
முன்னதாக, திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு வந்தவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வழங்கி ரெயிலில் அனுப்பிவைக்கப்பட்டனர்.