கோவை: கோவையில் ஆட்சியரின் உத்தரவை மீறி கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளை குழு அமைத்து கண்காணிக்கக்கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை: கோவையில் ஆட்சியரின் உத்தரவை மீறி கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளை குழு அமைத்து கண்காணிக்கக்கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை மாவட்டம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள் அரசு உத்தரவை மீறி கட்டணம் வசூல் செய்வதாக இந்திய மாணவர் சங்கத்தினர் ஆதாரத்துடன் புகாரளித்து இருந்தனர்.
இதனையடுத்து, கடந்தாண்டு மற்றும் இந்தாண்டு கல்வி கட்டணத்தை கொரோனா காலத்தில் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் நேற்று பத்திரிக்கை செய்தியை வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில், வருகின்ற 8, 10 மற்றும் 15ம் தேதிக்குள் முழுமையான கட்டணத்தை செலுத்தக்கோரி தனியார் பள்ளிகள் கட்டாயப்படுத்துவதாக குற்றம்சாட்டியுள்ள இந்திய மாணவர் சங்கத்தினர், மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் குழு அமைத்து ஆய்வு நடத்தக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்தனர்.