திருப்பூரில் இருந்து சொந்த மாநிலத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கக் கோரி வடமாநில தொழிலாளர்கள் 200க்கும் மேற்பட்டோர் போராட்டம்!!

திருப்பூர்: திருப்பூரில் இருந்து சொந்த மாநிலத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கக் கோரியும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து வடமாநில தொழிலாளர்கள் 200க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூரில் இருந்து சொந்த மாநிலத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கக் கோரியும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து வடமாநில தொழிலாளர்கள் 200க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் திருப்பூரில் தங்கியிருந்த வெளிமாநில தொழிலாளர்கள் விருப்பத்தின் பேரில் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், திருப்பூரை அடுத்த குணங்கள்பாளையம் பகுதியில் உள்ள பனியன் நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்களில் 300க்கும் மேற்பட்ட பீகார் உள்ளிட்ட வட மாநில தொழிலாளர்கள் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் தங்கி பணியாற்றி வருகின்றனர்.



இதனிடையே இப்பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள், தங்கள் சொந்த மாநிலத்திற்க்கு செல்ல, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பதிவு செய்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் தங்கள் சொந்த மாநிலத்திற்குச் செல்ல, மாவட்ட நிர்வாகம் இதுவரை நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறியும், உடனடியாக இப்பகுதியை சேர்ந்த தொழிலாளர்களை தங்களது சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்க இரயில் வசதி செய்து தரக்கோரி, மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், திருப்பூரை அடுத்த குணங்கள்பாளையம் பிரிவு அருகே 200 க்கு மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் வடமாநிலத் தொழிலாளர்களிடம் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...