கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும் தெரிவிக்க 9445477016 என்ற WhatsApp எண்ணை அறிமுகப்படுத்தினார். மாணவர் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும்.


Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவ மாணவியர்களுக்கான புகார் WhatsApp எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளார். பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்கள் தங்கள் குறைகளையும் பாதுகாப்பு கவலைகளையும் தெரிவிக்க இந்த வசதி உருவாக்கப்பட்டுள்ளது.




மாவட்டத்தில் இயங்கி வரும் சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவ மாணவியர்கள், அடிப்படை வசதிகள் குறித்த தேவைகள், ஐயங்கள், பாதுகாப்பு குறைபாடுகள், விடுதி நிர்வாக சிக்கல்கள் மற்றும் அசாதாரண சூழல்கள் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் 9445477016 என்ற WhatsApp எண்ணில் தைரியமாக தெரிவிக்கலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.




இந்த WhatsApp எண் 24 மணி நேரமும் செயல்பாட்டில் இருக்கும். விடுதியில் வழங்கப்படும் வசதிகளில் உள்ள குறைபாடுகள், தவறுகள், விடுதி நிர்வாகம் சரிவர இயங்கவில்லை என்ற புகார்கள், மாணவர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் எந்த நேரத்திலும் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




முக்கியமாக, புகார் அளிக்கும் மாணவ மாணவியர்களின் விவரங்கள் எக்காரணம் கொண்டும் வெளியிடப்படாது என்றும், அவர்களின் தனிப்பட்ட விவரங்கள் முழுமையாக ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும் ஆட்சியர் உறுதியளித்துள்ளார். புகார் குறித்து மட்டுமே விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




தமிழக அரசு வழங்கும் விடுதி வசதிகளை முழுமையாக பெற்று பயனடைய இந்த வாய்ப்பை மாணவ மாணவியர்கள் நன்முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனார் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த நடவடிக்கை விடுதி மாணவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...