அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறையினர் விரைவாகக் கண்டறிந்து மூன்று பேரை கைது செய்துள்ளனர். திருடப்பட்ட பணம், பொருட்கள், 3 பவுன் தங்கச் சங்கிலி மற்றும் குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு வழக்கில் 72 மணி நேரத்தில் மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளில் 24 மணி நேரத்திற்குள் மூன்று பேரை கைது செய்து, திருடப்பட்ட பணம், பொருட்கள் மற்றும் நகைகளை மீட்டுள்ளனர்.

கடந்த ஜூன் 30-ஆம் தேதி இரவு அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் உள்ள பல்வேறு வணிக நிறுவனங்களின் பூட்டுகளை உடைத்து, மர்மநபர்கள் பணம் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை திருடிச் சென்றனர். இதுகுறித்து வணிகர்கள் அளித்த புகாரின் பேரில் அன்னூர் காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் உத்தரவின் பேரில், மேட்டுப்பாளையம் துணைக் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கர் மேற்பார்வையில், அன்னூர் காவல் நிலைய ஆய்வாளர் அண்ணாதுரை தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் உள்ள 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகள் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களை ஆய்வு செய்த தனிப்படையினர், 72 மணி நேரத்திற்குள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மற்றும் பாண்டி ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து திருடப்பட்ட பணம் மற்றும் பொருட்கள் மீட்கப்பட்டதுடன், குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதற்கிடையில், கடந்த ஜூலை 2-ஆம் தேதி மாலை அன்னூர் நகரில் வேலை முடித்து வீட்டிற்கு நடந்து சென்ற பெண்ணிடம் இருந்து 3 பவுன் தங்கச் சங்கிலியை மர்மநபர் ஒருவர் பறித்துச் சென்றார். இதுகுறித்து அன்னூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.

சம்பவம் நடைபெற்ற பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகள் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களை ஆய்வு செய்த தனிப்படையினர், 24 மணி நேரத்திற்குள் மதுரையைச் சேர்ந்த அபிஷேக் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து பறிக்கப்பட்ட 3 பவுன் தங்கச் சங்கிலி முழுமையாக மீட்கப்பட்டு, உரிய நடைமுறைகளுக்குப் பிறகு பாதிக்கப்பட்ட பெண்ணிடம் ஒப்படைக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட அபிஷேக்கும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு உள்ளிட்ட சொத்துக் குற்றங்களை தொழில்நுட்ப ஆதாரங்களின் உதவியுடன் விரைவாகக் கண்டறிந்து, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தும் நடவடிக்கைகளை கோவை மாவட்ட காவல்துறை தொடர்ந்து தீவிரமாக மேற்கொண்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...