கோவை: கொரோனா நோய் தொற்றையடுத்து கோவை அரசு மருத்துவமனையில் காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ளது.
கோவை: கொரோனா நோய் தொற்றையடுத்து கோவை அரசு மருத்துவமனையில் காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பையடுத்து கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, இங்கு வரும் நோயாளிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நோய்த்தொற்று அறிகுறிகளான காய்ச்சல் இருமல், சளி போன்ற பாதிப்பில் இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஐ.எல்.ஐ வார்டு ஏற்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.
இதே போல் மூச்சு திணறல் பாதிப்பு என வரும் நபர்களுக்கு எஸ்.ஆர்.ஐ என்ற வார்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த வார்டுகளில் தினமும் 80 முதல் 100 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவமனை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வார்டு 24 மணி நேரமும் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.