ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளுக்காக திருப்பூர் பழைய பேருந்து நிலையம் இடிக்கும் பணி துவங்கியது
திருப்பூர்: ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளுக்காக திருப்பூர் பழைய பேருந்து நிலையம் இடிக்கும் பணி துவங்கியது
திருப்பூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளுக்காக பழைய பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு பல்வேறு புதிய வசதிகளுடன் புதிதாக கட்டப்பட உள்ளது.
அதற்காக பழைய பேருந்து நிலைய வளாகம் இடிக்கும் பணி இன்று துவங்கி நடைபெற்று வருகிறது.
218 கடைகளுடன் செயல்பட்டு வந்த பழைய பேருந்து நிலையம் கட்டிடத்தை இடிப்பதற்கு முன்பாக கடை உரிமையாளர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை என கடை உரிமையாளர்கள் மாநகராட்சியின் மீது புகார் அளித்துள்ளனர்.
ஊரடங்கிற்கு முன்பாக கடையில் இருந்த பொருட்களை எடுக்காமல் சென்று விட்ட சூழ்நிலையில் தற்போது தங்கள் பொருட்களை காணவில்லை எனவும் புகார் அளித்துள்ளனர்.