திருப்பூரில் நடமாடும் காச நோய் பரிசோதனை வாகனத்தை மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் இன்று, மே 20 ஆம் தேதி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
திருப்பூர்: திருப்பூரில் நடமாடும் காச நோய் பரிசோதனை வாகனத்தை மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் இன்று, மே 20 ஆம் தேதி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
காச நோய் இல்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் தமிழகம் முழுவதும் காச நோய் பரிசோதனை வாகனத்தை தமிழக நல்வாழ்வுத்துறை ஏற்படுத்தியுள்ளது.
இதன் மூலம் திருப்பூர் மாவட்டத்திற்கான காச நோய் பரிசோதனை வாகனத்தை இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த வாகனத்திற்குள் காசநோய் தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ள தேவையான எக்ஸ்ரே உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.