மேட்டுப்பாளையத்தில் பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் 10,000 வாழை மரங்கள் சேதம் - விவசாயிகள் கவலை

கோவை: மேட்டுப்பாளையம் அருகே நேற்று இரவு பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த மழையில் 10,000 வாழை மரங்கள் சேதம் அடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.


கோவை: மேட்டுப்பாளையம் அருகே நேற்று இரவு பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த மழையில் 10,000 வாழை மரங்கள் சேதம் அடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று மாலை பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.



இதில் காரமடை அதன் சுற்றுவட்டார பகுதியை பயிரிட்டு இருந்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சூறாவளி காற்றில் சிக்கி சேதமானது.

காரமடை அருகே உள்ள திம்மம்பாளையம் புதூர் பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவரது தோட்டத்தில் ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த 2000 வாழைகள் சூறாவளி காற்றில் சிக்கி இரண்டாக முறிந்து சேதமானது.

மேலும், அதே பகுதியை சேர்ந்த கந்தசாமி என்பவரின் தோட்டத்தில இரண்டரை ஏக்கரில் பயிரிட்டு இருந்த 3500 வாழை மரங்கள் சுப்பையன் என்பவரது தோட்டத்தில் ஒரு ஏக்கர் வாழை என மொத்தம் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் காற்றில் சிக்கி சேதம் ஆகியுள்ளது.

இதனால் ஒவ்வொரு விவசாயும் பல லட்சம் ரூபாய் செலவு செய்து பயிரிட்டு இருந்த வாழைகள் ஒரேநாளில் சேதமானதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Newsletter

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...