திருப்பூரில் 5ம் கட்டமாக 1464 வடமாநில தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பு!

திருப்பூர்: திருப்பூரில் 5ம் கட்டமாக 1464 வடமாநில தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


திருப்பூர்: திருப்பூரில் 5ம் கட்டமாக 1464 வடமாநில தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

திருப்பூரில் ஊரடங்கு அமலில் இருக்கும் நேரத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்களின் சொந்த ஊர் செல்ல ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்திருந்தனர்.

இந்நிலையில், அவர்களில் 5ம் கட்டமாக இன்று 1464 பேர் ரயில் மூலம் சொந்த மாநிலமான பீகாருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஏற்கனவே கடந்த வாரம் 4 ரயில்கள் மூலம் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.



முன்னதாக, வடமாநில தொழிலாளர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது. தண்ணீர் பாட்டில், உணவு உள்ளிட்டவைகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் ரயில் மூலம் செல்பவர்களுக்கு கொடுக்கப்பட்டது.

திருப்பூரில் வேலை செய்வது தங்களுக்கு பிடித்து உள்ளதாகவும் கொரோனா காரணத்தால் மட்டுமே தற்போது தங்கள் ஊருக்கு செல்வதாக தெரிவித்த வடமாநில தொழிலாளர்கள், இந்த பிரச்சினைகள் முடிந்த பின்பு மீண்டும் திரும்பி வருவோம் என்று தெரிவித்தனர்.

Newsletter

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...