திருப்பூர்: திருப்பூரில் 5ம் கட்டமாக 1464 வடமாநில தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
திருப்பூர்: திருப்பூரில் 5ம் கட்டமாக 1464 வடமாநில தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
திருப்பூரில் ஊரடங்கு அமலில் இருக்கும் நேரத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்களின் சொந்த ஊர் செல்ல ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்திருந்தனர்.
இந்நிலையில், அவர்களில் 5ம் கட்டமாக இன்று 1464 பேர் ரயில் மூலம் சொந்த மாநிலமான பீகாருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஏற்கனவே கடந்த வாரம் 4 ரயில்கள் மூலம் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
முன்னதாக, வடமாநில தொழிலாளர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது. தண்ணீர் பாட்டில், உணவு உள்ளிட்டவைகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் ரயில் மூலம் செல்பவர்களுக்கு கொடுக்கப்பட்டது.
திருப்பூரில் வேலை செய்வது தங்களுக்கு பிடித்து உள்ளதாகவும் கொரோனா காரணத்தால் மட்டுமே தற்போது தங்கள் ஊருக்கு செல்வதாக தெரிவித்த வடமாநில தொழிலாளர்கள், இந்த பிரச்சினைகள் முடிந்த பின்பு மீண்டும் திரும்பி வருவோம் என்று தெரிவித்தனர்.