குன்னூரில் மின்தடையை சீரமைக்கும் பணியின் போது மின்சாரம் தாக்கி மின் ஊழியர் பலி

நீலகிரி: குன்னூரில் மின்வாரிய ஊழியர் எட்வின் சுரேஸ் வெள்ளிக் கிழமை மின் கம்பத்தில் பழுது பார்க்கும் போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


நீலகிரி: குன்னூரில் மின்வாரிய ஊழியர் எட்வின் சுரேஸ் வெள்ளிக் கிழமை மின் கம்பத்தில் பழுது பார்க்கும் போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் ஒட்டுப்பட்டரைப் பகுதியை சேர்ந்தவர் எட்வின் சுரேஷ் குன்னூர் மின்வாரியத்தில் பணிபுரிந்து வருகிறார், இவர் வெள்ளிக் கிழமை ஆழ்வார்பேட்டை பகுதியில் மின்தடை ஏற்பட்ட காரணத்தால் அதனை சரிசெய்ய மின் பணியாளர் எட்வின் சுரேஷ் அப்பகுதியில் உள்ள மின் கம்பத்தில் ஏறி சரி செய்ய முற்பட்டார்.

அப்போது, திடீரென மின்சாரம் பாய்ந்து தூக்கி விசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து மேல் குன்னூர் காவல் துறையினர் உடலை கைப்பற்றி குன்னூர் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து மேல் குன்னூர் காவல் ஆய்வாளர் ஜெய முருகன் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

Newsletter

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...