குன்னூரில் மின்தடையை சீரமைக்கும் பணியின் போது மின்சாரம் தாக்கி மின் ஊழியர் பலி

நீலகிரி: குன்னூரில் மின்வாரிய ஊழியர் எட்வின் சுரேஸ் வெள்ளிக் கிழமை மின் கம்பத்தில் பழுது பார்க்கும் போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


நீலகிரி: குன்னூரில் மின்வாரிய ஊழியர் எட்வின் சுரேஸ் வெள்ளிக் கிழமை மின் கம்பத்தில் பழுது பார்க்கும் போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் ஒட்டுப்பட்டரைப் பகுதியை சேர்ந்தவர் எட்வின் சுரேஷ் குன்னூர் மின்வாரியத்தில் பணிபுரிந்து வருகிறார், இவர் வெள்ளிக் கிழமை ஆழ்வார்பேட்டை பகுதியில் மின்தடை ஏற்பட்ட காரணத்தால் அதனை சரிசெய்ய மின் பணியாளர் எட்வின் சுரேஷ் அப்பகுதியில் உள்ள மின் கம்பத்தில் ஏறி சரி செய்ய முற்பட்டார்.

அப்போது, திடீரென மின்சாரம் பாய்ந்து தூக்கி விசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து மேல் குன்னூர் காவல் துறையினர் உடலை கைப்பற்றி குன்னூர் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து மேல் குன்னூர் காவல் ஆய்வாளர் ஜெய முருகன் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

Newsletter

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...