கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் முன் களப்பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி சிஐடியு ஆர்ப்பாட்டம்!

கோவை: கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் முன் களப்பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி கோவையில் சிஐடியுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் முன் களப்பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி கோவையில் சிஐடியுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உலகையே கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில் பரவலை தடுக்க இந்தியாவில் பொது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தொற்று நோய் தடுப்பு பணியில் மருத்துவர், செவிலியர், தூய்மை பணியாளர், காவலர், குடிநீர், மின்சாரம், ஊடகவியலாளர்கள் என முன் களப்பணியாளர்கள் சுற்றிசுழன்றி பணியாற்றி வருகின்றனர்.

ஆனால், இவர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் முழுமையாக வழங்கப்படவில்லை. இதன் காரணமாக இப்பணியில் ஈடுபட்டுள்ள முன் களப்பணியாளர்கள் ஏராளமானோர் கொரோனா தொற்று ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் மரணமடைந்தும் உள்ளனர்.

இதனையடுத்து, இப்பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும், உயிரிழந்த பணியாளர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து சிஐடியுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை காட்டூர் சிஐடியு மாவட்டக்குழு அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். இதில் சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் கே.மனோகரன், ரத்தினகுமார், ஏ.எல்.ராஜா உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...