கோவை: கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் முன் களப்பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி கோவையில் சிஐடியுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் முன் களப்பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி கோவையில் சிஐடியுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உலகையே கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில் பரவலை தடுக்க இந்தியாவில் பொது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தொற்று நோய் தடுப்பு பணியில் மருத்துவர், செவிலியர், தூய்மை பணியாளர், காவலர், குடிநீர், மின்சாரம், ஊடகவியலாளர்கள் என முன் களப்பணியாளர்கள் சுற்றிசுழன்றி பணியாற்றி வருகின்றனர்.
ஆனால், இவர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் முழுமையாக வழங்கப்படவில்லை. இதன் காரணமாக இப்பணியில் ஈடுபட்டுள்ள முன் களப்பணியாளர்கள் ஏராளமானோர் கொரோனா தொற்று ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் மரணமடைந்தும் உள்ளனர்.
இதனையடுத்து, இப்பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும், உயிரிழந்த பணியாளர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து சிஐடியுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை காட்டூர் சிஐடியு மாவட்டக்குழு அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். இதில் சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் கே.மனோகரன், ரத்தினகுமார், ஏ.எல்.ராஜா உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.