கல்லார் அரசு தோட்டக்கலை பண்ணையில் தாகத்தை தீர்க்கும் தண்ணீர் ஆப்பிள் சீசன் தொடக்கம்..! களைகட்டியது விற்பனை!

கோவை: மேட்டுப்பாளையம் கல்லார் அரசு தோட்டக்கலை பண்ணையில் தாகத்தை தீர்க்கும் தண்ணீர் ஆப்பிள் சீசன் தொடங்கியுள்ளதால் மரங்களில் பழங்கள் கொத்து கொத்தாய் காய்த்து தொங்குகின்றன.


கோவை: மேட்டுப்பாளையம் கல்லார் அரசு தோட்டக்கலை பண்ணையில் தாகத்தை தீர்க்கும் தண்ணீர் ஆப்பிள் சீசன் தொடங்கியுள்ளதால் மரங்களில் பழங்கள் கொத்து கொத்தாய் காய்த்து தொங்குகின்றன.

இதை வாட்டர் ஆப்பிள் என்று ஆங்கிலத்தில் கூறுவர். கடல் மட்டத்தில் இருந்து 1,500 அடி உயரம் மற்றும் மலையடிவார பகுதிகளில் மட்டுமே இந்த மரம் நன்கு வளரும்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள கல்லாரில் அரசு தோட்டக்கலை பண்ணை அமைந்துள்ளது. மா, பலா, எலுமிச்சை, துரியன், லிட்சி, மங்குஸ்தான், மலையன் ஆப்பிள், ரம்பூட்டான், வாட்டர் ஆப்பிள் போன்ற பல்வேறு வகையான பழ வகைகள் இங்கு உற்பத்தி செய்யப்பட்டு தோட்டக்கலைத்துறை மூலம் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.



இந்த நிலையில், இப்பண்ணையில் தற்போது வாட்டர் ஆப்பிள் பழத்தின் சீசன் துவங்கியுள்ளது. பழப்பண்ணையில் 20க்கும் மேற்பட்ட வாட்டர் ஆப்பிள் பழத்தின் மரங்கள் உள்ள நிலையில் தற்போது அந்த மரங்கள் முழுவதும் பழங்கள் கொத்து கொத்தாய் காய்த்து தொங்குகின்றன. எப்போதும் குளுமையான பருவ நிலையில் உள்ள கல்லாரில் மட்டுமே இந்த பழங்கள் உற்பத்தி செய்யப்படும் நிலையில் நீர் சத்து அதிகமாக இந்த பழத்தில் உள்ளதால் இதற்கென தனி சுவையும் உண்டு.



இந்த பழத்தில் வைட்டமின் சி சத்து அதிகம் நிறைந்துள்ளதால் இதனை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நீர்ச்சத்து நிறைந்து இருப்பதால் வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும். இதனால் தாகத்தை தீர்க்கும் தண்ணீர் ஆப்பிள் பழத்தை விரும்பி வாங்கி சாப்பிட பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...