கல்லார் அரசு தோட்டக்கலை பண்ணையில் தாகத்தை தீர்க்கும் தண்ணீர் ஆப்பிள் சீசன் தொடக்கம்..! களைகட்டியது விற்பனை!

கோவை: மேட்டுப்பாளையம் கல்லார் அரசு தோட்டக்கலை பண்ணையில் தாகத்தை தீர்க்கும் தண்ணீர் ஆப்பிள் சீசன் தொடங்கியுள்ளதால் மரங்களில் பழங்கள் கொத்து கொத்தாய் காய்த்து தொங்குகின்றன.


கோவை: மேட்டுப்பாளையம் கல்லார் அரசு தோட்டக்கலை பண்ணையில் தாகத்தை தீர்க்கும் தண்ணீர் ஆப்பிள் சீசன் தொடங்கியுள்ளதால் மரங்களில் பழங்கள் கொத்து கொத்தாய் காய்த்து தொங்குகின்றன.

இதை வாட்டர் ஆப்பிள் என்று ஆங்கிலத்தில் கூறுவர். கடல் மட்டத்தில் இருந்து 1,500 அடி உயரம் மற்றும் மலையடிவார பகுதிகளில் மட்டுமே இந்த மரம் நன்கு வளரும்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள கல்லாரில் அரசு தோட்டக்கலை பண்ணை அமைந்துள்ளது. மா, பலா, எலுமிச்சை, துரியன், லிட்சி, மங்குஸ்தான், மலையன் ஆப்பிள், ரம்பூட்டான், வாட்டர் ஆப்பிள் போன்ற பல்வேறு வகையான பழ வகைகள் இங்கு உற்பத்தி செய்யப்பட்டு தோட்டக்கலைத்துறை மூலம் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.



இந்த நிலையில், இப்பண்ணையில் தற்போது வாட்டர் ஆப்பிள் பழத்தின் சீசன் துவங்கியுள்ளது. பழப்பண்ணையில் 20க்கும் மேற்பட்ட வாட்டர் ஆப்பிள் பழத்தின் மரங்கள் உள்ள நிலையில் தற்போது அந்த மரங்கள் முழுவதும் பழங்கள் கொத்து கொத்தாய் காய்த்து தொங்குகின்றன. எப்போதும் குளுமையான பருவ நிலையில் உள்ள கல்லாரில் மட்டுமே இந்த பழங்கள் உற்பத்தி செய்யப்படும் நிலையில் நீர் சத்து அதிகமாக இந்த பழத்தில் உள்ளதால் இதற்கென தனி சுவையும் உண்டு.



இந்த பழத்தில் வைட்டமின் சி சத்து அதிகம் நிறைந்துள்ளதால் இதனை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நீர்ச்சத்து நிறைந்து இருப்பதால் வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும். இதனால் தாகத்தை தீர்க்கும் தண்ணீர் ஆப்பிள் பழத்தை விரும்பி வாங்கி சாப்பிட பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

Newsletter

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...

கோவையில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக கருதப்பட்ட புகைப்படக் கலைஞர் வழக்கில் அதிர்ச்சி திருப்பம்; திட்டமிட்டு கொலை செய்ததாக 2 பேர் நீதிமன்றத்தில் சரண்

கோவை தடாகம் அருகே காணாமல் போன புகைப்படக் கலைஞர் பிரவீன், ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக முதலில் கருதப்பட்ட நிலையில், அவரை...

வடவள்ளியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 40-ல் உள்ள வடவள்ளி பகுதியில் அனுமதியின்றி விளம்பர போஸ்டர்கள் ஒட்டிய தனியா...

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...