கோவை: வால்பாறை பழங்குடியின மக்களுக்கு சி.எஸ்.ஐ பழங்குடிகள் துறை சார்பாக நிவாரண உதவிகள் விநியோகம் செய்யப்பட்டது.
கோவை: வால்பாறை பழங்குடியின மக்களுக்கு சி.எஸ்.ஐ பழங்குடிகள் துறை சார்பாக நிவாரண உதவிகள் விநியோகம் செய்யப்பட்டது.
கோவை மாவட்டம் வால்பாறையில் அடர்ந்த வனப்பகுதியில் 16க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் குடியிருப்புகள் உள்ளன. இவற்றில் காடர், புலையர், முதுவர், இருளர் இன மக்கள் சுமார் 1500 பேர் வசித்து வருகின்றனர்.
கொரானா ஊரடங்கு உத்தரவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பழங்குடியின மக்களுக்கு வால்பாறை சி.எஸ்.ஐ திருச்சபை மற்றும் திருச்சி தஞ்சை திருமண்டலத்தில் செயல்பட்டு வரும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடிகள் துறை சார்பாக 100 பழங்குடியினர் குடும்பங்களுக்கு சமையல் தொகுப்புகள் வழங்கப்பட்டது.
துறைத் தலைவர் மற்றும் பேராயர் சந்திரசேகரன் மற்றும் பொறுப்பாளர் ஆயர் சுதார்சன் ஆகியோர் பழங்குடியின மக்களுக்கு உதவிகள் வழங்க உத்தரவிட்டதையடுத்து, 100 குடும்பங்களுக்கு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடிகள் துறை இயக்குநர் ஆயர் ஜான்பிரபு நிவாரண பொருட்களை, மறைமாவட்ட தலைவர் ஆயர் ஜெயராஜ் தலைமையில் வனத்துறையுடன் இணைந்து வழங்கினார்.
முதல் கட்டமாக கூமாட்டி மற்றும் பாலகிணார் மலை கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் ஆனைமலை மறை மாவட்ட பெண்கள் ஐக்கிய சங்க தலைவர் எலிசபெத் ரெனா, மானாம்பள்ளி வனவர் விஷ்ணு, நிர்வாகிகள் ஜெபராஜ், குமார், ஜேஸ்பர், எழில் ஜெப்ரி, வனத்துறை ஊழியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் அடர்ந்த வனப்பகுதியில் 16க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் குடியிருப்புகள் உள்ளன. இவற்றில் காடர், புலையர், முதுவர், இருளர் இன மக்கள் சுமார் 1500 பேர் வசித்து வருகின்றனர்.
கொரானா ஊரடங்கு உத்தரவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பழங்குடியின மக்களுக்கு வால்பாறை சி.எஸ்.ஐ திருச்சபை மற்றும் திருச்சி தஞ்சை திருமண்டலத்தில் செயல்பட்டு வரும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடிகள் துறை சார்பாக 100 பழங்குடியினர் குடும்பங்களுக்கு சமையல் தொகுப்புகள் வழங்கப்பட்டது.
துறைத் தலைவர் மற்றும் பேராயர் சந்திரசேகரன் மற்றும் பொறுப்பாளர் ஆயர் சுதார்சன் ஆகியோர் பழங்குடியின மக்களுக்கு உதவிகள் வழங்க உத்தரவிட்டதையடுத்து, 100 குடும்பங்களுக்கு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடிகள் துறை இயக்குநர் ஆயர் ஜான்பிரபு நிவாரண பொருட்களை, மறைமாவட்ட தலைவர் ஆயர் ஜெயராஜ் தலைமையில் வனத்துறையுடன் இணைந்து வழங்கினார்.
முதல் கட்டமாக கூமாட்டி மற்றும் பாலகிணார் மலை கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் ஆனைமலை மறை மாவட்ட பெண்கள் ஐக்கிய சங்க தலைவர் எலிசபெத் ரெனா, மானாம்பள்ளி வனவர் விஷ்ணு, நிர்வாகிகள் ஜெபராஜ், குமார், ஜேஸ்பர், எழில் ஜெப்ரி, வனத்துறை ஊழியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.