கோவை: கோவையில் இளைஞரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்பட்ட விவகாரத்தில் தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் கோட்டை அப்பாஸ் விசாரணைக்குப் பின் விடுவிக்கப்பட்டார்.
கோவை: கோவையில் இளைஞரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்பட்ட விவகாரத்தில் தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் கோட்டை அப்பாஸ் விசாரணைக்குப் பின் விடுவிக்கப்பட்டார்.
கோவை கோட்டைமேடு பகுதியில் வசித்து வருபவர் சந்தோஷ். இவர் அப்பகுதியிலுள்ள இறைச்சி கடையில் வேலைபார்த்து வருகிறார். இவரும் சாய்பாபா காலனியை சேர்ந்த இஸ்லாமிய பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சந்தோஷ் மற்றும் அவரது காதலி இருவரும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, அப்பெண்ணை தேடும் பணியில் அவரது உறவினர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தோஷை தேடி அவரது நண்பர் விக்னேஷ் உள்ளிட்ட நண்பர்கள் கோட்டைமேடு பகுதிக்கு வந்துள்ளனர். அவர்களிடம் அப்பெண்ணின் உறவினரும் திமுக இளைஞர் அணியின் கோவை மாவட்ட அமைப்பாளருமான கோட்டை அப்பாஸ், சந்தோஷ் மற்றும் அவரது நண்பர்களிடம் அந்த பெண் குறித்து விசாரித்ததாக தெரிகிறது.
அப்போது, இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டு விக்னேஷை கோட்டை அப்பாஸ் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து செல்போனை பறித்து கொண்டதாக சந்தோஷ்குமார் உக்கடம் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.
இதனையடுத்து, விக்னேஷ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு விசாரணைக்கு பின்னர் அவரை விடுவித்தனர்.