கோவை: உலக தலசீமியா( இரத்த அழிவு சோகை) தினத்தை முன்னிட்டு கோவையில் சக்ஷம் அமைப்பின் சார்பில் இரத்த தான முகாம் நடைபெற்றது.
கோவை: உலக தலசீமியா( இரத்த அழிவு சோகை) தினத்தை முன்னிட்டு கோவையில் சக்ஷம் அமைப்பின் சார்பில் இரத்த தான முகாம் நடைபெற்றது.
உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான குழந்தைகளை ஆண்டுதோறும் பாதிப்புக்குள்ளாக்கி வரும் மரபணு நோயான "தலசீமியா" என்ற "இரத்த அழிவு சோகை" நோயிலிருந்து விடுபெற உலக தலசீமியா தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
மேலும், இந்த தலசீமியா நோயானது புரத கட்டமைப்பில் குறைபாடுகளை ஏற்படுத்தி, உடலில் உள்ள ரத்த சிவப்பணுக்களை அழிக்கின்றன. இதனால் இந்த நோய் பாதித்த குழந்தைகள் 2 வயதிலேயே ரத்த சோகையால் மரணிக்கின்றனர்.
தலசீமியா மைனர் கொண்ட நோயாளிகளுக்கு பொதுவாக தனிமுறை சிகிச்சைகள் தேவைப்படாது. ஆனால், தலசீமியா மேஜர் கொண்ட நோயாளிகளுக்கு நீடித்த காலமான இரத்த ஏற்றுதல், பிணி நீக்கல் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது.
அதேபோல, இந்த பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை ரத்தம் தேவைப்படுகிறது. மேலும் கோவையை பொறுத்தவரை குழந்தைகள் முதல் பெரியவர் வரை சுமார் 62 நபர்களுக்கு மேல் இந்த நோய் பாதிப்பில் உள்ளனர்.
இந்த நிலையில், இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக இரத்தம் தேவைப்படுவதால் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உலக தலசீமியா தினத்தை முன்னிட்டு சக்ஷம் அமைப்பின் சார்பில் இந்திய மருத்துவ சங்கம் கட்டிடத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்படுத்தப்பட்டது.
தொடர்ந்து 15 நபர்கள் இன்று இரத்த தானம் வழங்கினர்.
இதையடுத்து, இந்த நோய்க்காக கொடையாளர்கள் தொடர்ந்து ரத்த தானம் வழங்க வேண்டும் எனவும் இந்த மரபுவழி நோய் குறித்த விழிப்புணர்வு பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிகழ்வில் ஒருங்கிணைப்பாளர் தேவ கோவிந்த்ராஜ், சக்ஷம் மாவட்ட தலைவர் பிரபு, மாநில பொருளாளர் ரமேஷ், இளைஞரணி அமைப்பாளர் சண்முகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.